கோவை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கோவையில் அதிமுகவினர் மௌன ஊர்வலமாகச் சென்று அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
கோவை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கோவையில் அதிமுகவினர் மௌன ஊர்வலமாகச் சென்று அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதிமுக முன்னாள் பொது செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு தினம், அதிமுகவினரால் தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவையில் ஓசூர் ரோட்டில் உள்ள அஇதிமுக அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் இருந்து அவிநாசி சாலையில் உள்ள அண்ணா சிலை வரை அக்கட்சியினர் மவுன ஊர்வலம் சென்று அங்குள்ள அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கோவை மாநகர் மாவட்ட செயலாளர், அம்மன் அர்ஜுனன் தலைமையில் மவுன ஊர்வலமாக சென்ற சுமார் 200க்கும் மேற்பட்ட அஇதிமுக தொண்டர்கள், பின்னர் மீண்டும் ஊர்வலமாக அஇதிமுக அலுவலகம் திரும்பி வந்து,ப்அங்கு வைக்கபட்டு இருந்த ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அஇதிமுக தொண்டர்கள் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அதிமுக முன்னாள் பொது செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு தினம், அதிமுகவினரால் தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவையில் ஓசூர் ரோட்டில் உள்ள அஇதிமுக அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் இருந்து அவிநாசி சாலையில் உள்ள அண்ணா சிலை வரை அக்கட்சியினர் மவுன ஊர்வலம் சென்று அங்குள்ள அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கோவை மாநகர் மாவட்ட செயலாளர், அம்மன் அர்ஜுனன் தலைமையில் மவுன ஊர்வலமாக சென்ற சுமார் 200க்கும் மேற்பட்ட அஇதிமுக தொண்டர்கள், பின்னர் மீண்டும் ஊர்வலமாக அஇதிமுக அலுவலகம் திரும்பி வந்து,ப்அங்கு வைக்கபட்டு இருந்த ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அஇதிமுக தொண்டர்கள் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.