கோவை: கோவையில் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை: கோவையில் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை இருகூர், அங்காளியம்மன் வீதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (56), இவர் தள்ளுவண்டி கடை வைத்து நடத்தி வருகிறார். ஒரு வாரத்திற்கு முன்பு இரவு இவர் சிங்காநல்லூரில் உள்ள தனது நண்பர்களுக்கு பணம் கொடுப்பதற்காக எஸ்ஐஎச்எஸ் காலனி ரயில்வே தண்டவாளம் பகுதியில் நடந்து சென்றார்.
அப்போது, அவருக்கு எதிரே வந்த 2 வாலிபர்கள் திடீரென அவரை வழிமறித்தனர். பின்னர் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஈஸ்வரன் கழுத்தில் வைத்து அவரிடம் இருந்த பணம் 10 ஆயிரத்தை பறித்து அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஈஸ்வரன் இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், சிங்காநல்லூர் காவல் ஆய்வாளர் ராஜ்குமார் மற்றும் போலீசார் இருகூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இரண்டு வாலிபர்கள் மது குடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் ஓடினர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை துரத்திப் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சிங்கப்பூரைச் சேர்ந்த சங்கர் (25), இருகூரை சேர்ந்த சிவக்குமார் (24), என்பதும் இவர்கள் இரண்டு பேரும் ஈஸ்வரிடம் பணத்தை பறித்துச் சென்றது தெரியவந்தது.
மேலும் இவர்கள் 2 பேர் மீதும் சிங்காநல்லூர், பீளமேடு ஆகிய போலீஸ் நிலையங்களில் வழிப்பறி, அடிதடி உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை இருகூர், அங்காளியம்மன் வீதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (56), இவர் தள்ளுவண்டி கடை வைத்து நடத்தி வருகிறார். ஒரு வாரத்திற்கு முன்பு இரவு இவர் சிங்காநல்லூரில் உள்ள தனது நண்பர்களுக்கு பணம் கொடுப்பதற்காக எஸ்ஐஎச்எஸ் காலனி ரயில்வே தண்டவாளம் பகுதியில் நடந்து சென்றார்.
அப்போது, அவருக்கு எதிரே வந்த 2 வாலிபர்கள் திடீரென அவரை வழிமறித்தனர். பின்னர் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஈஸ்வரன் கழுத்தில் வைத்து அவரிடம் இருந்த பணம் 10 ஆயிரத்தை பறித்து அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஈஸ்வரன் இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், சிங்காநல்லூர் காவல் ஆய்வாளர் ராஜ்குமார் மற்றும் போலீசார் இருகூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இரண்டு வாலிபர்கள் மது குடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் ஓடினர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை துரத்திப் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சிங்கப்பூரைச் சேர்ந்த சங்கர் (25), இருகூரை சேர்ந்த சிவக்குமார் (24), என்பதும் இவர்கள் இரண்டு பேரும் ஈஸ்வரிடம் பணத்தை பறித்துச் சென்றது தெரியவந்தது.
மேலும் இவர்கள் 2 பேர் மீதும் சிங்காநல்லூர், பீளமேடு ஆகிய போலீஸ் நிலையங்களில் வழிப்பறி, அடிதடி உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.