நீலகிரி மாவட்டத்தின் அனைத்து சுற்றுலா மையங்களும் வரும் 7ம் தேதி முதல் திறக்கப்படும் - மாவட்ட ஆட்சியர் தகவல்!

நீலகிரி: கோவிட் 19 ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 24ந் தேதி முதல் மூடப்பட்டுள்ள நீலகிரி மாவட்டத்தின் அனைத்து சுற்றுலா மையங்கள் வரும் 7ந் தேதி திங்கள் கிழமை முதல் திறக்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.


நீலகிரி: கோவிட் 19 ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 24ந் தேதி முதல் மூடப்பட்டுள்ள நீலகிரி மாவட்டத்தின் அனைத்து சுற்றுலா மையங்கள் வரும் 7ம் தேதி திங்கள் கிழமை முதல் திறக்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

உதகமண்டலத்தில் இன்று செய்தியாளர்களிடையே பேசிய அவர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் இயங்கும் படகு இல்லம், தொட்டபெட்டா உள்ளிட்ட சுற்றுலா மையங்கள் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக் குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கும் சுற்றுலா மையங்களும் திறக்கப்படும் என்றார்.

மேலும், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு சுற்றுலா பயணிகள் அனுமதிப்பது குறித்து அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும், அரசின் அனுமதி கிடைத்தவுடன் திறக்கப்படும் என்று தெரிவித்த அவர், சுற்றுலா மையங்கள் திறக்கப்பட்டாலும் அரசின் கோவிட் 19 வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் இ - பதிவு விதிமுறைகள் கடைபிடிப்பது உறுதி செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...