கோவை: கோவையில் மனைவி தாய் வீட்டுக்கு கோபித்து சென்றதால் கணவர்கள் இருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவையில் மனைவி தாய் வீட்டுக்கு கோபித்துச் சென்றதால் கணவர்கள் இருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கருமலை செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் (35), கூலித்தொழிலாளி. இவரது மனைவி அம்பிகா (29). இவர்களுக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனிடையே, நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் அம்பிகா கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்றார்.
பின்னர் ஆனந்தன் அம்பிகாவின் வீட்டிற்குச் சென்று அவரை சமாதானப்படுத்தி வீட்டிற்கு வருமாறு கூறினார். ஆனால், அம்பிகா அவருடன் வர மறுத்துவிட்டார். இதனால் ஆனந்தன் மனவேதனையுடன் இருந்து வந்தார்.
இந்த நிலையில், சம்பவத்தன்று விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆர்.எஸ் புரம் போலீசார் வழக்கு செய்து 174வது பிரிவின் கீழ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல, நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி சுதாகர் (33). இவருக்கும் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரிந்து சென்றார். இதனால் சுதாகர் மனவேதனையுடன் இருந்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சாணி பவுடர் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை கருமலை செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் (35), கூலித்தொழிலாளி. இவரது மனைவி அம்பிகா (29). இவர்களுக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனிடையே, நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் அம்பிகா கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்றார்.
பின்னர் ஆனந்தன் அம்பிகாவின் வீட்டிற்குச் சென்று அவரை சமாதானப்படுத்தி வீட்டிற்கு வருமாறு கூறினார். ஆனால், அம்பிகா அவருடன் வர மறுத்துவிட்டார். இதனால் ஆனந்தன் மனவேதனையுடன் இருந்து வந்தார்.
இந்த நிலையில், சம்பவத்தன்று விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆர்.எஸ் புரம் போலீசார் வழக்கு செய்து 174வது பிரிவின் கீழ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல, நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி சுதாகர் (33). இவருக்கும் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரிந்து சென்றார். இதனால் சுதாகர் மனவேதனையுடன் இருந்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சாணி பவுடர் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.