கொரோனா தடுப்பு மருந்துகளை அனைவருக்கும் வழங்க மத்திய அரசு என்ன வகையிலான முன்னேற்பாடுகளை செய்துள்ளது - பிரதமர் மோடிக்கு பி.ஆர்.நடராஜன் எம்பி கடிதம்

கோவை: கொரோனா தடுப்பு மருந்துகள் அனைவருக்கும் வழங்குவதற்கு மத்திய அரசு என்ன வகையிலான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என நாடாளுமன்ற விவகாரத்துறையின் மூலம் பிரதமர் மோடிக்கு பி.ஆர்.நடராஜன் கேள்வி எழுப்பி கடிதம் எழுதியுள்ளார்.


கோவை: கொரோனா தடுப்பு மருந்துகள் அனைவருக்கும் வழங்குவதற்கு மத்திய அரசு என்ன வகையிலான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என நாடாளுமன்ற விவகாரத்துறையின் மூலம் பிரதமர் மோடிக்கு பி.ஆர்.நடராஜன் எம்பி கேள்வி எழுப்பி கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

ஜனநாயகத்தில் ஒரு ஓட்டுகூட பலரின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும். இதனை கருத்தில் கொள்ளாமல் இன்று பாரத பிரதமர் மோடி அவர்களின் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த கலந்துரையாடல் நிகழ்வில் பத்து எம்பிக்களுக்கு குறைவாக உள்ள கட்சிகளுக்கு பேச அனுமதி மறுத்திருப்பது ஏற்புடையதல்ல. இது வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகளின் குரலை முடக்குவது மட்டுமன்றி, வாக்களித்த மக்களின் குரலை மதிக்காத போக்கு என்பதை மத்திய அரசுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அதேநேரத்தில் பேசுவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டாலும், மக்களின் எண்ணங்களை பிரதமர் மோடி தனது கலந்துரையாடல் நிகழ்வில் வெளிப்படுத்துகிறாரா என்பதை அறிய நிகழ்வில் பங்கேற்ற அதேநேரத்தில் மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் மக்கள் பிரதிநிதி என்கிற முறையில் மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறையின் மூலம் பிரதமர் மோடி அவர்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த எனது கேள்விகள் மற்றும் சந்தேகங்களை கடிதம் வாயிலாக தெரியப்படுத்தியுள்ளேன்.

இதில் அரசு மருத்துவமனைகளில் முன் களப்பணியாளர்களாக கொரோனா தடுப்பு நடவடிக்கையில் போராடும் ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் கட்டமைப்பு வளர்ச்சிகளை இதுபோன்ற நோய்ப்பேரிடர்களை வருங்காலத்தில் எதிர்கொள்ள எதுபோன்ற கட்டமைப்பு ஏற்பாடுகளை செய்ய உள்ளது என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

இதேபோன்று, கொரோனா தடுப்பு மருந்து எந்த காலகட்டத்திற்குள் விநியோகம் செய்யப்பட உள்ளது. கொரோனா வேக்சின் அனைவருக்கும் தரப்படுவதில்லை என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளது உண்மையா. மத்திய அரசு தடுப்பு மருந்துகள் அனைவருக்கும் வழங்குவதற்கு என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பொருளாதாரத்தில்.

மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருளாதாரம் மீளும் காலம்வரை மாதாமாதம் நிவாரண நிதி வழங்குவதற்கு ஏதேனும் திட்டம் உள்ளதா உள்ளிட்ட கேள்விகளை நாடாளுமன்ற விவகாரத்துறைக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...