வடகிழக்கு பருவமழை: கோவையில் இதுவரை 160 மி.மீ மழை பதிவு; எதிர்பார்த்ததை விட குறைந்த அளவே பெய்துள்ளது - வேளாண் பல்கலைக்கழகம் தகவல்

கோவை: கோவை மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் துவங்கி தற்போது வரை வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு சராசரியாக 315 மி.மீ. வரை வடகிழக்கு பருவமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஆனால், தற்போது வரை குறைந்த அளவே மழை பெய்து உள்ளது, என வேளாண் பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் துவங்கிதற்போதுவரை வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு சராசரியாக315 மி.மீ. வரை வடகிழக்கு பருவமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஆனால், தற்போது வரை குறைந்த அளவே மழை பெய்து உள்ளது, என வேளாண் பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கோவை வேளாண் பல்கலைக்கழககாலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் ராமநாதன் கூறுகையில், ‘‘கோவை மாவட்டத்தில் தற்போது வரை 160 மி.மீ. அளவுக்கு வடகிழக்கு பருவமழை பெய்து உள்ளது. இன்னும், 145 மி.மீ. மழை பெய்ய வேண்டியது உள்ளது. இந்த மாதம் இறுதி வரை வடகிழக்கு பருவமழைக்கு வாய்ப்பு உள்ளதால் மீதமுள்ள 145 மி.மீ. மழையும்கிடைக்கும் என்று கருதுகிறோம். புரெவி புயலால் கோவைக்கு மழைக்கு வாய்ப்பு இல்லை.

இந்த புயலால் தென் மாவட்டங்களுக்கு தான் மழைக்கு வாய்ப்பு உள்ளது. கோவையை பொறுத்தவரை தென்மேற்கு பருவமழை சராசரிஅளவை தாண்டி பெய்து உள்ளது. இதன்காரணமாக நீர்நிலைகளில் போதுமான அளவிற்கு தண்ணீர் உள்ளது,’’ என்றார்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...