அவிநாசி ஊராட்சியில் 846 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா!

திருப்பூர்: அவிநாசி ஊராட்சியில் 846 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: அவிநாசி ஊராட்சியில் 846 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாவட்டம் அவினாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தத்தனூர், புலிப்பார் மற்றும் பஞ்சை தாமரைக்குளம் ஆகிய 3 ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சுமார் 846 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க தமிழக அரசு முடிவு செய்து அதற்கான நடவடிக்கையாக தத்தனூர் ஊராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இதையடுத்து, தற்போது நிலம் கையகப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருவதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து அவிநாசி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், அவிநாசி வட்டாட்சியர் உள்ளிட்டோரிடம் மனு அளித்த அப்பகுதி பொதுமக்கள் தொழில் பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தத்தனூர், புலிப்பார் மற்றும் புஞ்சை தாமரைக்குளம் ஆகிய 3 ஊராட்சிகளிலும் தீர்மானம் நிறைவேற்றி பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து இருந்தனர்.

மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிப்பதற்காக வந்த அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக மனு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், தற்போது அவிநாசி அத்திக்கடவு அவினாசி திட்டம் நடைபெற்று வரக்கூடிய சூழ்நிலையில் 846 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழில் பூங்கா அமையுமானால் அப்பகுதி நிலத்தடி நீர் பாதிக்கப்படும் தங்கள் விவசாய நிலங்கள் பறிக்கும். எனவே, அப்பகுதியில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கக் கூடாது என வலியுறுத்தி வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...