பொள்ளாச்சி: தென்னை நார் விலை உயர்வு, பிளாஸ்டிக் கயிறு வருகை போன்ற காரணத்தால், பொள்ளாச்சி தென்னைநார் கயிறு உற்பத்தி தொழில் பெரும் பாதிப்பு அடைந்துள்ளதாக, உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
பொள்ளாச்சி: தென்னை நார் விலை உயர்வு, பிளாஸ்டிக் கயிறு வருகை போன்ற காரணத்தால், பொள்ளாச்சி தென்னைநார் கயிறு உற்பத்தி தொழில் பெரும் பாதிப்பு அடைந்துள்ளதாக, உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள கப்பலங்கரை, தாமரைக் குளம், வடக்கிபாளையம் போன்ற கிராமப்பகுதிகளில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தென்னை நார் மூலம் கயிறு உற்பத்தி செய்து கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் விற்பனைக்காக அனுப்பி வைக்கின்றனர். இதில், தாமரைகுளம் பகுதியில் 25க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தென்னைநார் கயிறு உற்பத்தி தொழிலை நம்பியே இருந்து வருகின்றனர். பொதுவாக, குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து இந்த கயிறு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆறுமாத காலமாக ஊரடங்கு, தென்னை நார் விலை உயர்வு, பிளாஸ்டிக் கயிறு வருகை அதிகரிப்பு போன்ற காரணத்தால் தென்னைநார் கயிறு உற்பத்தி தொழில் நலிவடைந்து வருவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காலங்காலமாக, தென்னைநார் கயிறு உற்பத்தி ஈடுபட்டுவரும் தங்களுக்கு 30 கிலோ கொண்ட தென்னைநார் 600 ரூபாய் கிடைத்து வந்த நிலையில், தற்போது 1,000 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது. இதனால், தென்னைநார் கயிறு மூலம் முன்பு போல் வருமானம் கிடைப்பதில்லை என உற்பத்தியாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். மேலும், தற்போது பொள்ளாச்சி பகுதியில் மழை காரணமாக தென்னை நார் ஈரப்பதமாக உள்ளதால், உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
மேலும், ஊரடங்கு கட்டுபாடுகளால் கோவில் விழாக்கள், அரசியல் கட்சி நடத்தும் விழா, பெரிதாக நடக்காத காரணத்தால் கயிறு விற்பனையும் மந்தமாகி இருப்பதால், கடந்த ஆறு மாதமாக நலிவடைந்து வரும் தென்னைநார் கயிறு உற்பத்தி தொழிலை, காப்பாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள கப்பலங்கரை, தாமரைக் குளம், வடக்கிபாளையம் போன்ற கிராமப்பகுதிகளில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தென்னை நார் மூலம் கயிறு உற்பத்தி செய்து கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் விற்பனைக்காக அனுப்பி வைக்கின்றனர். இதில், தாமரைகுளம் பகுதியில் 25க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தென்னைநார் கயிறு உற்பத்தி தொழிலை நம்பியே இருந்து வருகின்றனர். பொதுவாக, குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து இந்த கயிறு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆறுமாத காலமாக ஊரடங்கு, தென்னை நார் விலை உயர்வு, பிளாஸ்டிக் கயிறு வருகை அதிகரிப்பு போன்ற காரணத்தால் தென்னைநார் கயிறு உற்பத்தி தொழில் நலிவடைந்து வருவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காலங்காலமாக, தென்னைநார் கயிறு உற்பத்தி ஈடுபட்டுவரும் தங்களுக்கு 30 கிலோ கொண்ட தென்னைநார் 600 ரூபாய் கிடைத்து வந்த நிலையில், தற்போது 1,000 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது. இதனால், தென்னைநார் கயிறு மூலம் முன்பு போல் வருமானம் கிடைப்பதில்லை என உற்பத்தியாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். மேலும், தற்போது பொள்ளாச்சி பகுதியில் மழை காரணமாக தென்னை நார் ஈரப்பதமாக உள்ளதால், உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
மேலும், ஊரடங்கு கட்டுபாடுகளால் கோவில் விழாக்கள், அரசியல் கட்சி நடத்தும் விழா, பெரிதாக நடக்காத காரணத்தால் கயிறு விற்பனையும் மந்தமாகி இருப்பதால், கடந்த ஆறு மாதமாக நலிவடைந்து வரும் தென்னைநார் கயிறு உற்பத்தி தொழிலை, காப்பாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.