குனியமுத்தூர் பகுதிகளில் அமைச்சர் வேலுமணி ஆய்வு..! தெருக்களில் தேங்கி நிற்கும் மழை நீரை மோட்டார் கொண்டு வெளியேற்ற உத்தரவு

கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம்‌ குனியமுத்தூர்‌ பகுதிகளில்‌ மழை நீர்‌ சூழ்ந்த குடியிருப்பு பகுதிகளை, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி நேரில்‌ இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம்‌ குனியமுத்தூர்‌ பகுதிகளில்‌ மழை நீர்‌ சூழ்ந்த குடியிருப்பு பகுதிகளை, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி நேரில்‌ இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட குனியமுத்தார்‌ பகுதிகளில்‌ கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையால்‌ அப்பகுதிகளைச்‌ சுற்றி உள்ள வயல்‌ வரப்புகளில்‌ நீீர் நிரம்பி வழிந்தோடியது‌‌. மேலும், அப்பகுதியில்‌‌ செங்குளம் இருப்பதால்,‌ சுண்டக்காமுத்தூர்‌ மெயின்‌ ரோடு, கங்கா நகர்‌, ஜே.பி.நகா்‌, லட்சுமி நகர்‌, வெற்றித்திருநகர்‌, ஆதித்யா கார்டன்‌ ஆகிய பகுதிகளில்‌ மழை நீர் சூழ்ந்து காணப்பட்டது.



இப்பகுதிகளை இன்று மாநகராட்சி ஆணையருடன் பார்வையிட்ட, அமைச்சர், அங்கு‌ தேங்கியுள்ள நீரை வெளியேற்ற ஜென்செட் மற்றும் நீர் உறுஞ்சும்‌ மோட்டார்‌ பம்புகள்‌ மூலம்‌ வெளியேற்ற தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்‌ என மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதனைக்‌ தொடர்ந்து, லட்சுமி நகர்‌ பகுதியில்‌ குடிநீர் இணைப்பு வேண்டும்‌ என தெரிவித்த பொதுமக்களுக்கு இணைப்பு வழங்கிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும்‌, பொது குடிநீர் குழாய்‌ இணைப்பு வேண்டிய இடங்களில்‌ இணைப்பு பொருத்தி தருமாறும்‌ மாநகராட்சி அலுவலா்களுக்கு உத்தரவிட்டார்.



பின்னர்‌, தெற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.87 ஆதித்பா கார்டன்‌ பகுதியில்‌, குறிஞ்சி நகர்‌ பகுதியில் சேரும் மழை நீரை புட்டூவிக்கி கால்வாயில்‌ இணைக்க குழாய்‌ பதிக்கும்‌ பணிக்கான பூமி பூஜையினை அமைச்சா்‌ எஸ்‌.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.

இவ்வாய்வின்போது, மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌, மாநகராட்சி துணை ஆணையாளா்‌ எஸ்‌.மதுராந்தகி, மாநகரப்‌ பொறியாளர்‌ லட்சுமணன்‌, செயற்பொறியாளர்‌ ஞானவேல்‌, தெற்கு மண்டல உதவி ஆணையர்‌ டி.ஆர்‌.ரவி, உதவிப்‌ பொறியாளா்கள்‌, தெற்கு மண்டல சுகாதார அலுவலர்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலா்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...