கோவை: கோவை மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட ஆர்.எஸ்புரம், வெங்கிடசாமி சாலை, பொன்னுரங்கம் சாலை, பெரியசாமி சாலை, திருவேங்கடசாமி சாலை, தடாகம் சாலை ஆகிய பகுதிகளில் 24 மணி நேர குடிநீர் வழங்கும் திட்டப்பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன், இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோவை: கோவை மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட ஆர்.எஸ்புரம், வெங்கிடசாமி சாலை, பொன்னுரங்கம் சாலை, பெரியசாமி சாலை, திருவேங்கடசாமி சாலை, தடாகம் சாலை ஆகிய பகுதிகளில் 24 மணி நேர குடிநீர் வழங்கும் திட்டப்பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன், இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சாலையோரங்களில் குப்பைகளை கொட்டாமல் குப்பைத்தொட்டிகளில் மட்டுமே கொட்ட வேண்டும் என்று அப்பகுதி குடியிருப்பு வாசிகளுக்கு
வேண்டுகோள் விடுத்தார். பின்னர், அப்பகுதி பொதுமக்களிடம் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது, குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளை விரைந்து முடிக்குமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், அப்பகுதிகளில் 24 மணி நேர குடிநீர் பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகளை முறையாக சமன் செய்து சீரமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். சாலைகளை சீர் செய்யும் பணிகளை தொய்வின்றி விரைந்து முடிக்குமாறு தொடர்புடைய மாநகராட்சி பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, அப்பகுதியிலுள்ள உணவகங்கள் மற்றும் சாலையோர கடை உரிமையாளர்களிடம் சாலை ஓரங்களில் குப்பைகளை கொட்டாமல், மாநகராட்சி தூய்மைப்பணியாளர்களிடம் வழங்கி, தங்கள் பகுதிகளை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, மேற்கு மண்டல உதவி ஆணையர் அ.ஜெ.செந்தில்அரசன், செயற்பொறியாளர் (24/7 குடிநீர் திட்டம்) பார்வதி, உதவி
செயற்பொறியாளர் செந்தில்பாஸ்கர், உதவிப் பொறியாலர்கள், கமலக்கண்ணன், சத்தியமூரத்தி, திட்ட மேலாண்மை ஆலோசகர் குழுத்தலைவர்
கோபாலகிருஷ்ணன், மற்றும் பணி மேற்பார்வையாளர், மாநகராட்சி அலுவலர்கள், சூயஸ் நிறுவனத்தினர் உடனிருந்தனர்.
சாலையோரங்களில் குப்பைகளை கொட்டாமல் குப்பைத்தொட்டிகளில் மட்டுமே கொட்ட வேண்டும் என்று அப்பகுதி குடியிருப்பு வாசிகளுக்கு
வேண்டுகோள் விடுத்தார். பின்னர், அப்பகுதி பொதுமக்களிடம் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது, குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளை விரைந்து முடிக்குமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், அப்பகுதிகளில் 24 மணி நேர குடிநீர் பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகளை முறையாக சமன் செய்து சீரமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். சாலைகளை சீர் செய்யும் பணிகளை தொய்வின்றி விரைந்து முடிக்குமாறு தொடர்புடைய மாநகராட்சி பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, அப்பகுதியிலுள்ள உணவகங்கள் மற்றும் சாலையோர கடை உரிமையாளர்களிடம் சாலை ஓரங்களில் குப்பைகளை கொட்டாமல், மாநகராட்சி தூய்மைப்பணியாளர்களிடம் வழங்கி, தங்கள் பகுதிகளை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, மேற்கு மண்டல உதவி ஆணையர் அ.ஜெ.செந்தில்அரசன், செயற்பொறியாளர் (24/7 குடிநீர் திட்டம்) பார்வதி, உதவி
செயற்பொறியாளர் செந்தில்பாஸ்கர், உதவிப் பொறியாலர்கள், கமலக்கண்ணன், சத்தியமூரத்தி, திட்ட மேலாண்மை ஆலோசகர் குழுத்தலைவர்
கோபாலகிருஷ்ணன், மற்றும் பணி மேற்பார்வையாளர், மாநகராட்சி அலுவலர்கள், சூயஸ் நிறுவனத்தினர் உடனிருந்தனர்.