திருப்பூர்: மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி, டெல்லியில் தொடர்ந்து விவசாயிகள் 8 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், பஞ்சாப் மற்றும் ஹரியானா பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், மத்திய அரசின் மூன்று புதிய விவசாய சட்டங்களால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத்தான் பயன் போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து தலைநகர் டெல்லி எல்லையில் போராடி வருகின்றனர்.
திருப்பூர்: மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி, டெல்லியில் தொடர்ந்து விவசாயிகள் 8 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், பஞ்சாப் மற்றும் ஹரியானா பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், மத்திய அரசின் மூன்று புதிய விவசாய சட்டங்களால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத்தான் பயன் போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து தலைநகர் டெல்லி எல்லையில் போராடி வருகின்றனர்.

புதிய விவசாய சட்டங்களை திரும்பப் பெற கோரி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக, இந்திய மாணவர் சங்கத்தினர் தெரிவித்திருந்தனர். அதன்படி, இன்று திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக உள்ள மத்திய தபால் நிலையத்தை இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராகவும் , வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.

புதிய விவசாய சட்டங்களை திரும்பப் பெற கோரி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக, இந்திய மாணவர் சங்கத்தினர் தெரிவித்திருந்தனர். அதன்படி, இன்று திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக உள்ள மத்திய தபால் நிலையத்தை இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராகவும் , வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.