பொள்ளாச்சியில் மாயமான 4 சிறுமி சிறுவர்கள் மீட்பு; நடிகர் விஜயை பார்க்க பணம் எடுத்துக்கொண்டு சென்றதாக முதல் கட்ட விசாரணையில் தகவல்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மகாலிங்கபுரம் எல்.ஐ.ஜி காலனியை சேர்ந்தவர் மணிகண்டன், சாரதா தம்பதியரின் மகள் தாரணி, காவ்யா, மகன், ஜெகதீஷ். (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மகாலிங்கபுரம் எல்.ஐ.ஜி காலனியை சேர்ந்தவர் மணிகண்டன், சாரதா தம்பதியரின் மகள் தாரணி, காவ்யா, மகன், ஜெகதீஷ். (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 

இவர்களது பக்கத்து வீட்டில் வசிக்கும் ரபீக் அகமது, சபிதா பீவி தம்பதியரின் பேரன் அகிய நான்கு பேரும், நேற்று மாலை வீட்டின் அருகே ஒன்றாக விளையாடிக் கொண்டிருந்தனர். 



நேற்று, இரவு 7 மணியளவில் குல குழந்தைகளை காணாததால், பெற்றோர் பதற்றம் அடைந்தனர். பின்னர், பெற்றோர்கள் அக்கம்பக்கம் தேடிப்பார்த்தும் குழந்தைகள் கிடைக்காததால், அதிர்ச்சியடைந்தனர். மேலும், குழந்தைகள் மாயமான சம்பவத்தை அறிந்த அப்பகுதியிலுள்ள நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

பின்னர் பெற்றோர்கள், பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதனையடுத்து, அங்கு விரைந்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குழந்தைகளை தீவிரமாக தேடி வந்தனர். குழந்தைகளை யாராவது கடத்திச் சென்று விட்டார்களா..? என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர். 

இதனிடையே, கோவை உக்கடம் பேருந்து நிலையம் அருகே இரவு 11.30 அளவில் நின்றுகொண்டிருந்த 4 குழந்தைகளையும் உக்கடம் போலீசார் மீட்டு பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, அங்கு சென்ற பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் குழந்தைகள் 4 பேரும் நடிகர் விஜயை பார்ப்பதற்காக வீட்டுக்கு தெரியாமல் பணம் எடுத்துக்கொண்டு சென்னை புறப்பட்டது தெரியவந்தது. நள்ளிரவில் நடிகரை பார்க்க பொள்ளாச்சியில் இருந்து நான்கு சிறுவர்கள் சென்னை செல்ல முயன்ற சம்பவம் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...