கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி, ஜக்கர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது 54). இவரது மகன் ஹரிஷ் (22), பஞ்சாப் மாநிலம் சட்டக் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்தார்.
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி, ஜக்கர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது 54). இவரது மகன் ஹரிஷ் (22), பஞ்சாப் மாநிலம் சட்டக் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்தார்.
விடுமுறை என்பதால், வீட்டிலிருந்தத ஹரிஷ் நேற்று தனது பள்ளி நண்பர்களான கௌசிக், முகுந்த் ஆகியோருடன் மதுக்கரை வழுக்குப்பாறையை சேர்ந்த நண்பர் அஸ்வின் என்பவரது தோட்டத்திற்கு சென்றனர். பின்னர், அஸ்வின் வீட்டில் மதிய உணவு சாப்பிட்டு விட்டு தோட்டத்தில் 4 பேரும் பேசிக் கொண்டிருந்தன.
இதையடுத்து, தோட்டத்தில் இருந்த சுமார் 60 அடி ஆழ கிணற்றில் இறங்கி 4 பேரும் தண்ணீரில் பந்து விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது, திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு தண்ணீரில் தத்தளித்த ஹரிஷ் நீரில் மூழ்கினார்.
அதிர்ச்சியடைந்த நண்பர்கள் அவரை மீட்க முயன்றனர், ஆனாலும் ஆழம் அதிகமாக இருந்ததால், ஹரிஷால் மேலே வர முடியவில்லை. இது குறித்து, மதுக்கரை போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக அங்கு வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடி கிணற்றில் இருந்து ஹரீஸ் உடலை மீட்டனர்.
இதையடுத்து, போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விடுமுறை என்பதால், வீட்டிலிருந்தத ஹரிஷ் நேற்று தனது பள்ளி நண்பர்களான கௌசிக், முகுந்த் ஆகியோருடன் மதுக்கரை வழுக்குப்பாறையை சேர்ந்த நண்பர் அஸ்வின் என்பவரது தோட்டத்திற்கு சென்றனர். பின்னர், அஸ்வின் வீட்டில் மதிய உணவு சாப்பிட்டு விட்டு தோட்டத்தில் 4 பேரும் பேசிக் கொண்டிருந்தன.
இதையடுத்து, தோட்டத்தில் இருந்த சுமார் 60 அடி ஆழ கிணற்றில் இறங்கி 4 பேரும் தண்ணீரில் பந்து விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது, திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு தண்ணீரில் தத்தளித்த ஹரிஷ் நீரில் மூழ்கினார்.
அதிர்ச்சியடைந்த நண்பர்கள் அவரை மீட்க முயன்றனர், ஆனாலும் ஆழம் அதிகமாக இருந்ததால், ஹரிஷால் மேலே வர முடியவில்லை. இது குறித்து, மதுக்கரை போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக அங்கு வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடி கிணற்றில் இருந்து ஹரீஸ் உடலை மீட்டனர்.
இதையடுத்து, போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.