திருப்பூர்: மாற்றுத் திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.5,000 நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகளை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்: மாற்றுத் திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.5,000 நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகளை போலீசார் கைது செய்தனர்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பாக தமிழகம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.5,000 நிவாரண தொகை வழங்க வேண்டும், அடையாள அட்டைக்காக அலைக்கழிக்கக்கூடாது, மாற்றுத் திறனாளிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்கிட வேண்டும், தனியார் நிறுவனங்களில் 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதையடுத்து, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பிய மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பாக தமிழகம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.5,000 நிவாரண தொகை வழங்க வேண்டும், அடையாள அட்டைக்காக அலைக்கழிக்கக்கூடாது, மாற்றுத் திறனாளிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்கிட வேண்டும், தனியார் நிறுவனங்களில் 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதையடுத்து, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பிய மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.