கோவை: விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கோவையில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் காவல் துறையினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கோவையில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் காவல் துறையினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேளாண்மை திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, கோவை உக்கடம் பகுதியில் இந்திய மாணவர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டக்காரர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்ய முயன்றனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மேலும், மத்திய அரசு டெல்லியில் விவசாயிகளையும் மாநில அரசு விவசாயிகளுக்கு ஆதரவாக போராடுபவர்களை காவல் துறையினரை கொண்டு ஒடுக்குவதாக அவ்வமைப்பினர் குற்றம்சாட்டினர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த போராட்டம் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வேளாண்மை திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, கோவை உக்கடம் பகுதியில் இந்திய மாணவர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டக்காரர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்ய முயன்றனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மேலும், மத்திய அரசு டெல்லியில் விவசாயிகளையும் மாநில அரசு விவசாயிகளுக்கு ஆதரவாக போராடுபவர்களை காவல் துறையினரை கொண்டு ஒடுக்குவதாக அவ்வமைப்பினர் குற்றம்சாட்டினர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த போராட்டம் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.