கோவையில் முககவசம்‌ அணிவதை கடைபிடிக்காத தேநீர் கடைகளுக்கு அபராதத்துடன் கடையை மூட உத்தரவு - மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை!

கோவை: கோவையில் உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் முககவசம்‌ அணியாமல்‌ பணியாளா்கள்‌ பணிபுரியும்‌ பட்சத்தில்‌ அவ்விடத்திற்கு அபராதம்‌ விதிப்பதுடன்‌ தற்காலிகமாக சில வாரங்களுக்கு உணவகங்கள்‌ மற்றும்‌ கடைகளை மூட உத்தரவிடப்படும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ குமாரவேல் பாண்டியன் எச்சரித்துள்ளார்.


கோவை: கோவையில் உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் முககவசம்‌ அணியாமல்‌ பணியாளா்கள்‌ பணிபுரியும்‌ பட்சத்தில்‌ அவ்விடத்திற்கு அபராதம்‌ விதிப்பதுடன்‌ தற்காலிகமாக சில வாரங்களுக்கு உணவகங்கள்‌ மற்றும்‌ கடைகளை மூட உத்தரவிடப்படும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ குமாரவேல் பாண்டியன் எச்சரித்துள்ளார்.

கோவை மாநகராட்சியின்‌ தீவிர கொரோனா தடுப்பு நடவடிக்கைகளினாலும்‌, மாநகர மக்களின்‌ ஒத்துழைப்பினாலும்‌ தற்போது கொரோனாவின்‌ பாதிப்பு குறைந்த நிலையில்‌ உள்ளது. மேலும்‌, கொரோனா தொற்று நடவடிக்கைகளில்‌ பொதுமக்கள்‌ முககவசம்‌ அணிவது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எனவே, மாநகராட்சிக்குட்பட்ட இடங்களில்‌ பொதுமக்கள்‌ தேநீர் மற்றும்‌ உணவருந்தக்‌ கூடும்‌ இடங்களான உணவகங்கள்‌, சிற்றுண்டிகள்‌, தேநீர்‌ கடைகள்‌ மற்றும்‌ பேக்கரிகளில்‌ கொரோனா தொற்று பரவுவதற்கு வாய்ப்புகள்‌ அதிகம்‌ என்பதால்‌ உணவகங்கள்‌, சிற்றுண்டிகள்‌, அங்குள்ள அனைத்து அலுவலா்களும்‌ கட்டாயம்‌ முககவசம்‌ அணிந்தும்‌, சமூக இடைவெளியை கடைபிடித்தும்‌ பணிபுரிதல்‌ வேண்டும்‌ என்றார்.

மேலும்‌, அடிக்கடி சோப்பினால்‌ கைகளைக்‌ கழுவ வேண்டும்‌. அவ்வாறு முககவசம்‌ அணியாமல்‌ அலுவலா்கள்‌ மற்றும்‌ பணியாளா்கள்‌ பணிபுரியும்‌ பட்சத்தில்‌ அவ்விடத்திற்கு அபராதம்‌ விதிப்பதுடன்‌ தற்காலிகமாக சில வாரங்களுக்கு உணவகங்கள்‌ மற்றும்‌ கடைகள்‌ மூட கடுமையாக உத்தரவிடப்படும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள்‌ உத்தரவிட்டுள்ளார்‌.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...