கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியில் 5 தடுப்பணைகள் அமைப்பதற்கான பூமி பூஜை..! அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்!

கோவை: கோவை கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியில் மதுக்கரை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் 5 தடுப்பணைகள் அமைப்பதற்கான பூமி பூஜை இன்று அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில் நடைபெற்றது.


கோவை: கோவை கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியில் மதுக்கரை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் 5 தடுப்பணைகள் அமைப்பதற்கான பூமி பூஜை இன்று அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில் நடைபெற்றது.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில்,

ஐஏஎஸ் அதிகாரிகள், வழக்கறிஞர்கள், சட்டத்துறை அமைச்சர் உள்ளிட்டவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர முதலமைச்சர் அரசு பள்ளி மாணவர்களுக்காக மருத்துவ படிப்பில் 7.5 சதவீத ஒதுக்கீட்டைக் கொண்டு வந்துள்ளார். கிராமத்தில் பிறந்த விவசாயி கூட நாட்டை ஆள முடியும், என பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.



அதேபோல, நிவர் புயலின் போது செம்பரம்பாக்கம் ஏரி நிறைந்த நிலையில், மக்களை காப்பதற்காக நேரடியாக செம்பரம்பாக்கம் அணைக்குகே சென்று முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.



மேலும், கோவை மாவட்டத்தில் அரசு உள் ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர 21 பேர் செய்ய தேர்வு செய்யப்பட்ட நிலையில், 15 பேருக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. மீதமுள்ள 6 பேர் காத்திருப்பில் உள்ளதாக கூறினார்.



கோவையில் உள் ஒதுக்கீட்டில் தேர்வான 15 மாணவர்களுக்கும் கல்விக் கட்டணத்தை அரசே முழுவதுமாக ஏற்றுக் கொண்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...