கோவை: "பேரா வாலிபால் அசோசியேசன் ஆப் கோயம்புத்தூர்" அமைப்பினர் மாற்றுத்திறனாளி கையுந்து பந்து வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதற்கான இட வசதியை செய்து தர வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை: "பேரா வாலிபால் அசோசியேசன் ஆப் கோயம்புத்தூர்" அமைப்பினர் மாற்றுத்திறனாளி கையுந்து பந்து வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதற்கான இட வசதியை செய்து தர வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அப்போது, கடந்த 5 ஆண்டுகளாக கோவையில் உள்ள தனியார் கல்லூரி மைதானம் அல்லது ஏதேனும் காலி இடங்களில் பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும், தற்போது வைரஸ் தொற்று பரவல் காரணமாக தனியார் கல்லூரிகளில் பயிற்சி மேற்கொள்ள இயலாத நிலை இருப்பதாக தெரிவித்தனர்.

பல்வேறு போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்றுள்ளதாகவும் பயிற்சிக்கான அரங்கமோ, அடிப்படை தேவைகள் கட்டமைப்பு வசதிகள் இன்றி பயிற்சி எடுக்க முடியாமல் சிரமப்பட்டு வருவதாகவும் எனவே, தங்களுக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் விளையாடுவதற்கு "சிட்டிங் வாலிபால்" விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கு இடம் ஒதுக்கி தர வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அப்போது, கடந்த 5 ஆண்டுகளாக கோவையில் உள்ள தனியார் கல்லூரி மைதானம் அல்லது ஏதேனும் காலி இடங்களில் பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும், தற்போது வைரஸ் தொற்று பரவல் காரணமாக தனியார் கல்லூரிகளில் பயிற்சி மேற்கொள்ள இயலாத நிலை இருப்பதாக தெரிவித்தனர்.
பல்வேறு போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்றுள்ளதாகவும் பயிற்சிக்கான அரங்கமோ, அடிப்படை தேவைகள் கட்டமைப்பு வசதிகள் இன்றி பயிற்சி எடுக்க முடியாமல் சிரமப்பட்டு வருவதாகவும் எனவே, தங்களுக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் விளையாடுவதற்கு "சிட்டிங் வாலிபால்" விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கு இடம் ஒதுக்கி தர வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.