நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கொராேனா தொற்று காரணமாக கடந்த 8 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட மலைரயில் இந்தி படத்தின் படப்பிடிப்பிற்காக குன்னூரில் இருந்து உதகை வழித்தடத்தில் இன்று இயக்கப்பட்டது.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கொராேனா தொற்று காரணமாக கடந்த 8 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட மலைரயில் இந்தி படத்தின் படப்பிடிப்பிற்காக குன்னூரில் இருந்து உதகை வழித்தடத்தில் இன்று இயக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் கொராேனா தொற்று காரணமாக கடந்த 8 மாதங்களாக மலைரயில் சேவையை தெற்கு ரயில்வே ரத்து செய்தது.
இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த இந்தி படக் குழுவினர் தாங்கள் தயாரிக்கும் இந்தி வெப்டீவி தொடரில் மலைரயில் காட்சிகள் இடம் பெற தெற்கு ரயில்வேயிடம் அனுமதி பெற்றிருந்ததைத் தொடர்ந்து, குன்னூர் உதகை இடையே கேத்தி ரயில் நிலையம் பகுதியில் மலைரயிலின் காட்சிகள் படமாக்கப்பட்டன.
அப்டாப் லவ் என்ற வெப் படத்திற்காக நீலகிரி மலைரயில் கேத்தி ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது, சேலம் கோட்டத்தில் அனுமதி பெற்று 5 லட்சம் ரூபாய் வைப்பு தொகையாக கட்டியுள்ளனர். இதில் ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எஞ்சினுடன் 5 பெட்டிகள் பொருத்தப்பட்டு மலை ரயில் கேத்தி ரயில் நிலையத்திற்கு வந்தடைந்ததைப் படக்குழுவினர் கேமராவில் பதிவு செய்தனர். கடந்த 8 மாதங்களாக இயங்காத மலைரயில் இயக்கப்பட்டதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் மலை ரயிலை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
மேலும், கேத்தி ரயில் நிலையம் அறிவிப்பு பலகையில் படப்பிடிப்புக்காக என்று மாற்றப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் கொராேனா தொற்று காரணமாக கடந்த 8 மாதங்களாக மலைரயில் சேவையை தெற்கு ரயில்வே ரத்து செய்தது.
இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த இந்தி படக் குழுவினர் தாங்கள் தயாரிக்கும் இந்தி வெப்டீவி தொடரில் மலைரயில் காட்சிகள் இடம் பெற தெற்கு ரயில்வேயிடம் அனுமதி பெற்றிருந்ததைத் தொடர்ந்து, குன்னூர் உதகை இடையே கேத்தி ரயில் நிலையம் பகுதியில் மலைரயிலின் காட்சிகள் படமாக்கப்பட்டன.
அப்டாப் லவ் என்ற வெப் படத்திற்காக நீலகிரி மலைரயில் கேத்தி ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது, சேலம் கோட்டத்தில் அனுமதி பெற்று 5 லட்சம் ரூபாய் வைப்பு தொகையாக கட்டியுள்ளனர். இதில் ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எஞ்சினுடன் 5 பெட்டிகள் பொருத்தப்பட்டு மலை ரயில் கேத்தி ரயில் நிலையத்திற்கு வந்தடைந்ததைப் படக்குழுவினர் கேமராவில் பதிவு செய்தனர். கடந்த 8 மாதங்களாக இயங்காத மலைரயில் இயக்கப்பட்டதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் மலை ரயிலை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
மேலும், கேத்தி ரயில் நிலையம் அறிவிப்பு பலகையில் படப்பிடிப்புக்காக என்று மாற்றப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.