கோவை: கோவையில் சாலையோரத்தில் கிடந்த ஒரு லட்ச ரூபாயை காவல் துறை மூலமாக உரிய நபரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கோவை: கோவையில் சாலையோரத்தில் கிடந்த ஒரு லட்ச ரூபாயை காவல் துறை மூலமாக உரிய நபரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கோவை போத்தனூர் ரோடு, சங்கமம் நகரில் வசிப்பவர் ஸ்டெல்லா. இவர் நேற்று மாலை பால் வாங்குவதற்காக வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, வீட்டு வாசலில் உள்ள சாலையோரத்தில் இரண்டு 500 ரூபாய் கட்டுகள் கிடந்தன. அதை எடுத்த ஸ்டெல்லா செட்டிபாளையம் காவல் நிலையத்துக்குச் சென்று சப் இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷிடம் விவரத்தைச் சொல்லி ஒப்படைத்தனர்.
இந்த நிலையில், போத்தனூரைச் சேர்ந்த இஸ்மாயில் என்பவர் தான் பள்ளி தொழுகை முடித்துவிட்டு வீட்டிற்குச் செல்லும் வழியில் வியாபாரத்திற்காக வைத்திருந்த இரண்டு 500 ரூபாய் கட்டுகள் கீழே விழுந்து விட்டன என கூறி அங்கு வந்தார். தன்னுடன் வந்த நண்பர் சபிக் என்பவரை சாட்சியாகவும் அழைத்து வந்தார்.
இதையடுத்து, உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் முன்னிலையில் ஒரு லட்சம் ரூபாயை இஸ்மாயில் இடம் வழங்கினார். இதனை தொடர்ந்து, ஸ்டெல்லாவின் நேர்மையை பாராட்டி அனைவரும் அவரை வாழ்த்தினர்.