நீலகிரி: உதகை நீதிமன்றத்தில் இன்று போக்சோ வழக்கில் 24 வயது இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிபதி அருணாசலம் உத்தரவிட்டார்.
நீலகிரி: உதகை நீதிமன்றத்தில் இன்று போக்சோ வழக்கில் 24 வயது இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிபதி அருணாசலம் உத்தரவிட்டார்.
நீலகிரி மாவட்டம் மசினகுடி வாழை தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன்(24) (தந்தை பெயர் நாதன் கூலி தொழிலாளி). இவர் தேன் குரும்பர் இனத்தைச் சேர்ந்தவர்.
இந்நிலையில், இவர் இப்பகுதி 16 வயது பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி அப்பகுதியில் உள்ள கல்குவாரியில் அருகே உள்ள கோவிலில் தாலிகட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண்ணின் தாயார் சுந்தரி கடந்த 26-3-18 கொடுத்த புகாரில் வழக்கு நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், இன்று நீதிபதி அருணாசலம் இந்த இளைஞருக்கு பெண்ணை கடத்திய குற்றத்திற்காக 3 ஆண்டுகள், குழந்தை திருமணத்திற்காக ஒரு வருடம், பாலியல் வன்கொடுமை குற்றம் என மொத்தம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கினார்.
தீர்ப்பை தொடர்ந்து அந்த இளைஞர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக மாலினி பிரபாகரன் ஆஜராகி வாதாடினார்.
இந்த வழக்கின் தீர்ப்பு பதினெட்டு மாதத்தில் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நீலகிரி மாவட்டம் மசினகுடி வாழை தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன்(24) (தந்தை பெயர் நாதன் கூலி தொழிலாளி). இவர் தேன் குரும்பர் இனத்தைச் சேர்ந்தவர்.
இந்நிலையில், இவர் இப்பகுதி 16 வயது பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி அப்பகுதியில் உள்ள கல்குவாரியில் அருகே உள்ள கோவிலில் தாலிகட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண்ணின் தாயார் சுந்தரி கடந்த 26-3-18 கொடுத்த புகாரில் வழக்கு நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், இன்று நீதிபதி அருணாசலம் இந்த இளைஞருக்கு பெண்ணை கடத்திய குற்றத்திற்காக 3 ஆண்டுகள், குழந்தை திருமணத்திற்காக ஒரு வருடம், பாலியல் வன்கொடுமை குற்றம் என மொத்தம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கினார்.
தீர்ப்பை தொடர்ந்து அந்த இளைஞர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக மாலினி பிரபாகரன் ஆஜராகி வாதாடினார்.
இந்த வழக்கின் தீர்ப்பு பதினெட்டு மாதத்தில் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.