கோவை: கோவை அருகே உள்ள சூலூர் காவல் நிலையம் திருச்சி பைபாஸ் ரோட்டின் மேல் உள்ளது. பொதுமக்கள் காவல் நிலையத்தை கடந்து செல்லும் பொழுது மெதுவாக செல்ல வேண்டும் என்பதற்காக தடுப்பு (பேரிகார்டு) வைக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை அருகே உள்ள சூலூர் காவல் நிலையம் திருச்சி பைபாஸ் ரோட்டின் மேல் உள்ளது. பொதுமக்கள் காவல் நிலையத்தை கடந்து செல்லும் பொழுது மெதுவாக செல்ல வேண்டும் என்பதற்காக தடுப்பு (பேரிகார்டு) வைக்கப்பட்டுள்ளது.
சாலையில் வரக்கூடிய சிறிய மற்றும் பெரிய கனரக வாகனங்கள் அந்த வழியாக செல்லும் பொழுது, அந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காவல் நிலையத்திற்கு மனு கொடுக்க செல்லக்கூடிய பொதுமக்கள் நீண்ட நேரம் சாலை ஓரத்தில் காத்திருக்க வேண்டியதாக உள்ளதாக, பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இன்று காலை இருசக்கர வாகனங்களை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி காவல் நிலையத்துக்கு எதிரே உள்ள பேரிகார்டு கடப்பதற்கு 15 நிமிடங்களுக்கு மேலானது. பின்பு, அங்குள்ள காவலர்கள் வந்து அந்த தடுப்பை அகற்றி அந்த கனரக வாகனம் செல்வதற்கு உதவியுள்ளனர்.
அதனால், பொதுமக்கள் உடனடியாக அந்த தடுப்பை நிரந்தரமாக அகற்றிவிட்டு, அதற்கு பதில் வேகத்தடை வைத்துக்கொள்ளலாம், என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாலையில் வரக்கூடிய சிறிய மற்றும் பெரிய கனரக வாகனங்கள் அந்த வழியாக செல்லும் பொழுது, அந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காவல் நிலையத்திற்கு மனு கொடுக்க செல்லக்கூடிய பொதுமக்கள் நீண்ட நேரம் சாலை ஓரத்தில் காத்திருக்க வேண்டியதாக உள்ளதாக, பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இன்று காலை இருசக்கர வாகனங்களை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி காவல் நிலையத்துக்கு எதிரே உள்ள பேரிகார்டு கடப்பதற்கு 15 நிமிடங்களுக்கு மேலானது. பின்பு, அங்குள்ள காவலர்கள் வந்து அந்த தடுப்பை அகற்றி அந்த கனரக வாகனம் செல்வதற்கு உதவியுள்ளனர்.
அதனால், பொதுமக்கள் உடனடியாக அந்த தடுப்பை நிரந்தரமாக அகற்றிவிட்டு, அதற்கு பதில் வேகத்தடை வைத்துக்கொள்ளலாம், என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.