கோவை: கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி பூ மார்க்கெட்டில் விதிமீறி திறக்கப்பட்ட 5 பூக்கடைகளுக்கு, மாநகராட்சி அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர்.
கோவை: கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி பூ மார்க்கெட்டில் விதிமீறி திறக்கப்பட்ட 5 பூக்கடைகளுக்கு, மாநகராட்சி அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர்.
கோவை ஆர்.எஸ்.புரம் அருகே மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பூ மார்க்கெட் வளாகத்தில் உள்ள கடைகளில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதியதாக 95 கடைகளும் கட்டப்பட்டு முடியும் தருவாயில் உள்ளன.
இதனிடையே, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஜூலை மாதம் முதல் தற்போது வரை இங்கு பூக்கடைகள் திறக்க மாநகராட்சி நிர்வாகம் சார்பாக அனுமதி வழங்கவில்லை.
இந்நிலையில், பூ மார்க்கெட் வளாகத்தின் அருகே மாநகராட்சியின் தடையை மீறி சிலர் பூக்கடைகள் திறந்து வியாபாரம் மேற்கொள்வதாக புகார் வந்தது.
இதனையடுத்து, மேற்கு மண்டல உதவி ஆணையர் செந்தில் அரசன் தலைமையில், உதவி வருவாய் ஆய்வாளர் மேனகாகுமாரி, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், சிறப்பு வருவாய் ஆய்வாளர் சுமதி உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் நேற்று பூமார்க்கெட் வளாகத்தில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அங்கு விதிமுறைகளை மீறி 5 பூக்கடைகள் திறக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அக்கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கோவை ஆர்.எஸ்.புரம் அருகே மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பூ மார்க்கெட் வளாகத்தில் உள்ள கடைகளில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதியதாக 95 கடைகளும் கட்டப்பட்டு முடியும் தருவாயில் உள்ளன.
இதனிடையே, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஜூலை மாதம் முதல் தற்போது வரை இங்கு பூக்கடைகள் திறக்க மாநகராட்சி நிர்வாகம் சார்பாக அனுமதி வழங்கவில்லை.
இந்நிலையில், பூ மார்க்கெட் வளாகத்தின் அருகே மாநகராட்சியின் தடையை மீறி சிலர் பூக்கடைகள் திறந்து வியாபாரம் மேற்கொள்வதாக புகார் வந்தது.
இதனையடுத்து, மேற்கு மண்டல உதவி ஆணையர் செந்தில் அரசன் தலைமையில், உதவி வருவாய் ஆய்வாளர் மேனகாகுமாரி, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், சிறப்பு வருவாய் ஆய்வாளர் சுமதி உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் நேற்று பூமார்க்கெட் வளாகத்தில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அங்கு விதிமுறைகளை மீறி 5 பூக்கடைகள் திறக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அக்கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.