கோவை: கோவையில் மாமனாருக்கு கொலை மிரட்டல் விடுத்த மருமகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை: கோவையில் மாமனாருக்கு கொலை மிரட்டல் விடுத்த மருமகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கோவை ஜக்கர் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது 55), கூலித்தொழிலாளி. இவரது மகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். அதற்கு காரணம் அவரது மருமகள், மீனா தான் என அவர் நெகமம் போலீசில் புகார் தெரிவித்திருந்தார்.
இது சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், மாமனார் மருமகள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று, மீண்டும் தகராறு ஏற்பட்ட போது, மீனா கிருஷ்ணசாமியை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதில் அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணசாமி, இது குறித்து நெகமம் போலீசில் புகார் தெரிவித்தார். விசாரணைக்கு பின்னர் போலீசார் 506 (2) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மீனாவை கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கோவை ஜக்கர் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது 55), கூலித்தொழிலாளி. இவரது மகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். அதற்கு காரணம் அவரது மருமகள், மீனா தான் என அவர் நெகமம் போலீசில் புகார் தெரிவித்திருந்தார்.
இது சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், மாமனார் மருமகள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று, மீண்டும் தகராறு ஏற்பட்ட போது, மீனா கிருஷ்ணசாமியை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதில் அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணசாமி, இது குறித்து நெகமம் போலீசில் புகார் தெரிவித்தார். விசாரணைக்கு பின்னர் போலீசார் 506 (2) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மீனாவை கைது செய்தனர்.