கோவையில் நண்பரின் நகையை திருடிய வாலிபர் கைது

கோவை: கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (26), தனியார் நிறுவன ஊழியர். இவர், அதே பகுதியில் தெரிந்தவர்களுடன் அறை எடுத்து தங்கி வேலை செய்து வந்துள்ளார்.


கோவை: கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (26), தனியார் நிறுவன ஊழியர். இவர், அதே பகுதியில் தெரிந்தவர்களுடன் அறை எடுத்து தங்கி வேலை செய்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று, அறையில் இருந்த பிரபாகரனின் இரண்டு பவுன் தங்க செயின் திடீரென மாயமானது. அதிர்ச்சி அடைந்த அவர் அறை முழுவதும் தேடிப் பார்த்தார், ஆனால், கிடைக்கவில்லை. இதையடுத்து, அவர் பீளமேடு போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பிரபாகரனின் அறையில் தங்கியிருந்த நாமக்கல்லைச் சேர்ந்த பெரியசாமி (21) (இவரது நண்பர்) என்பவர் நகை மாயமானது முதல் அறைக்கு வராமல் இருந்தது தெரியவந்தது. போலீசார் அவரை தேடி வந்த நிலையில், காளப்பட்டி பகுதியில் வைத்து பிடித்தனர்.

அப்போது, அவர் பிரபாகரனின் நகையை திருடியது ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் பெரியசாமியை 379 சட்ட பிரிவின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...