கோவையில் வங்கி சேவை மையம் நடத்தி 3 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது

கோவை: திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர் கிருஷ்ணன் (34). இவர், கோவை பெரியநாயக்கன்பாளையம் ரோட்டில், எஸ்.பி.ஐ வங்கி வாடிக்கையாளர் சேவை மையம் நடத்தி வருகிறார்.


கோவை: திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர் கிருஷ்ணன் (34). இவர், கோவை பெரியநாயக்கன்பாளையம் ரோட்டில், எஸ்.பி.ஐ வங்கி வாடிக்கையாளர் சேவை மையம் நடத்தி வருகிறார்.

கடந்த சில மாதங்களாக கிருஷ்ணன் வங்கி ஏ.டி.எம் மையத்திற்கு பணம் எடுத்து வரும் வயதானவர்களுக்கு உதவி செய்வது போல அவர்களுக்கு தெரியாமல் அவர்களின் கணக்கில் இருந்து பணத்தை எடுத்து மோசடி செய்து வந்துள்ளார். மேலும், வங்கி பணம் செலுத்த வருபவர்களிடம் பணத்தை பெற்று அந்த பணத்தை வங்கியில் செலுத்தாமல் மோசடி செய்து வந்தார்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு வாடிக்கையாளர்கள் பெ.நா பாளையத்திலுள்ள எஸ்.பி.ஐ வங்கி மேலாளரிடம் புகார் தெரிவித்தனர். அவர், இதுகுறித்து பெ.நா பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணனை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் 2 லட்சத்து இருபத்தி எட்டாயிரத்து 31 ரூபாய் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, கிருஷ்ணன் மோசடி செய்த பணத்தை திருப்பி செலுத்தி விடுவதாக கூறினார். முதற்கட்டமாக, அவரிடமிருந்து 154 ஏ.டி.எம் கார்டுகள் ரூபாய் ஒரு லட்சம் பணத்தை பெற்று, வாடிக்கையாளர்களிடம் போலீசார் வழங்கினர். மீதமுள்ள, 2 லட்சத்து 28 ஆயிரத்து 36 பணத்தை அவர் திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததால், போலீசார் கிருஷ்ணனை இன்று கைது செய்து முதலீட்டாளர் நல நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...