ரூபாய் நோட்டுகளில் கடவுள்களின் படங்கள் இடம்பெற வேண்டும் - இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்


பிரதமர் நரேந்திர மோடி, நேற்று மாலை நிகழ்த்திய உரையில், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும் வங்கிகளில் சென்று பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என்றும், கருப்பு பணத்தை ஒழிப்பதற்கான இந்த நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவளிக்குமாறும் தெரிவித்தார்.



பிரதமரின் இந்த திட்டத்தை வரவேற்கும் வகையில் கோவையில் இந்து மக்கள் கட்சியினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். தொடர்ந்து அக்கட்சியின் நிறுவனர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கருப்பு பணத்தை ஒழிக்கும் வகையில் பிரதமர் இத்திட்டத்தை கொண்டுவந்துள்ளார். தமிழக மக்கள் மட்டுமல்லாது, இந்தியாவில் அனைத்து மக்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். ஏழை மக்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்துள்ளனர். பாகிஸ்தானில் அச்சாகும் கள்ள நோட்டுகளையும், இந்தியாவில் பதுக்கப்பட்ட கருப்பு பணத்தையும் மீட்கும் முயற்சி. மோடி அரசின் இந்த முயற்சி மூலம் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட உள்ளது. இதை விரும்பாத சக்திகள் பல அவதூறுகளை பரப்பி வருகின்றனர். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளில் சுண்டல் மடிப்பத் போன்ற படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. இது அரசை அவமதிக்கும் செயல். அனைவரும் இத்திட்டத்தை வரவேற்போம். சிரமங்களை மக்கள் பொறுத்துக்கொண்டு எல்லோரும் இணைந்து அரசை வலுப்படுத்துவோம்.



இந்தியாவின் அனைத்து தேசிய தலைவர்களின் புகைப்படமும் ரூபாய் நோட்டுகளில் இடம் பெற வேண்டும். லட்சுமி,விநாயகர் போன்ற கடவுள்களில் படமும் இடம்பெற வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மண்டல அலுவலர்கள் பயிற்சி நிகழ்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக 10 தொகுதிகளுக்கான 366 மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்க...

T20 உலகக்கோப்பை வீரர் சஞ்சு சாம்சன் கோவை ADISSIA நிறுவனத்தின் Brand Ambassador ஆனார்

T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், கோவையைச் சேர...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் DST-FIST ஆதரவுடன் ₹1 கோடி மதிப்பில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 25, 2026 அன்று DST-FIST நிதியுதவியுடன் ₹1 கோடி மதி...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...