இந்திய விமானத் துறையின் சார்பில் லஞ்ச ஒழிப்பு வார விழா

ஏர்ப்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியாவின் சார்பில் கோவை மாவட்டத்தில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்பட்டது. கடந்த அக்டோபர் 31ம் தேதி முதல் நவம்பர் 5ம் தேதி வரை கோவை விமான நிலையத்தில் கடைபிடிக்கப்பட்ட இந்த விழாவில் கோவை மாவட்ட துணை காவல் ஆணையர் கே.சுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில், லஞ்ச ஒழிப்பை முன்னிட்டு கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், கோவையில் அமைந்துள்ள கேந்திரிய வித்யாலயா, சுகுனா பிப் பள்ளி, கே.சி.டி, ஜிஆர்டி கலை அறிவியல் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து பெருந்திரளான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இப்போட்டிகளில் விமான நிலைய ஊழியர்களும் பங்கேற்றனர்.



இதனைத்தொடர்ந்து, இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற பரிசுகள் வழங்கும் விழாவில் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

இதனிடையே, மாணவ, மாணவிகள் ஓவியப் போட்டியில் பங்கேற்றபோது வரையப்பட்ட ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டது. இதனை, கோவை மாவட்ட துணை காவல் ஆணையர் கே.சுந்தரராஜன் திறந்து வைத்து பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில், விமான நிலைய இயக்குநர் ஜி.பிரகாஷ் ரெட்டி, ஜெஜிஎம் (ஏடிஎம்) வி.பிரதீப் குமார், டிஜிஎம் (சிவில்) ஆர்.குல்ஸ்ரெஸ்தா உள்ளிட்ட அனைத்துறை தலைவர்களும் பங்கேற்றனர்.

Newsletter

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...