கோவை: ஜாதி ரீதியாக இழிவு செய்த நபர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டும் கைது செய்ய காவல்துறை காலதாமதம் செய்வதாக மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
கோவை: ஜாதி ரீதியாக இழிவு செய்த நபர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டும் கைது செய்ய காவல்துறை காலதாமதம் செய்வதாக மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
கோவை அடுத்து சூலூர் தாலுக்கா மலையாண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன்(23). இவர் அதே பகுதியைச் சேர்ந்த ராக்கியப்பன் என்பவரிடம் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், மலையம்பாளையம் பகுதியைச் சேர்ந்த எம்.ஆர்.பழனிசாமிக்கு டிராக்டர் ஓட்ட உரிமையாளர் கூறியதாகவும் அதற்கான வாடகையை அவரிடம் பெறுமாறு கூறி உள்ளார். மூன்று வாரங்கள் வாகனம் ஓட்டிய நிலையில், அதற்கான பணத்தை தருமாறு பழனிசாமியிடம் தமிழ்செல்வன் கேட்டு உள்ளார்.
இதல் ஆத்திரமடைந்த பழனிசாமி ஜாதி ரீதியாக திட்டி அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 30ம் தேதி சுல்தான்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வழக்குபதிவு செய்யப்பட்டு பல நாட்கள் ஆகியும் இதுவரை பழனிசாமியை கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக குற்றம் சாட்டி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். மேலும், தன்னை தாக்கியவர்கள் வழக்கை வாபஸ் பெற நிர்ப்பந்தம் செய்வதுடன் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தமிழ்செல்வன் தெரிவித்தார்.
கோவை அடுத்து சூலூர் தாலுக்கா மலையாண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன்(23). இவர் அதே பகுதியைச் சேர்ந்த ராக்கியப்பன் என்பவரிடம் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், மலையம்பாளையம் பகுதியைச் சேர்ந்த எம்.ஆர்.பழனிசாமிக்கு டிராக்டர் ஓட்ட உரிமையாளர் கூறியதாகவும் அதற்கான வாடகையை அவரிடம் பெறுமாறு கூறி உள்ளார். மூன்று வாரங்கள் வாகனம் ஓட்டிய நிலையில், அதற்கான பணத்தை தருமாறு பழனிசாமியிடம் தமிழ்செல்வன் கேட்டு உள்ளார்.
இதல் ஆத்திரமடைந்த பழனிசாமி ஜாதி ரீதியாக திட்டி அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 30ம் தேதி சுல்தான்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வழக்குபதிவு செய்யப்பட்டு பல நாட்கள் ஆகியும் இதுவரை பழனிசாமியை கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக குற்றம் சாட்டி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். மேலும், தன்னை தாக்கியவர்கள் வழக்கை வாபஸ் பெற நிர்ப்பந்தம் செய்வதுடன் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தமிழ்செல்வன் தெரிவித்தார்.