கோவையில் ஜாதி ரீதியாக இழிவு செய்த நபர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டும் கைது செய்ய காவல்துறை காலதாமதம் செய்வதாக புகார்!

கோவை: ஜாதி ரீதியாக இழிவு செய்த நபர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டும் கைது செய்ய காவல்துறை காலதாமதம் செய்வதாக மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.


கோவை: ஜாதி ரீதியாக இழிவு செய்த நபர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டும் கைது செய்ய காவல்துறை காலதாமதம் செய்வதாக மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

கோவை அடுத்து சூலூர் தாலுக்கா மலையாண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன்(23). இவர் அதே பகுதியைச் சேர்ந்த ராக்கியப்பன் என்பவரிடம் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், மலையம்பாளையம் பகுதியைச் சேர்ந்த எம்.ஆர்.பழனிசாமிக்கு டிராக்டர் ஓட்ட உரிமையாளர் கூறியதாகவும் அதற்கான வாடகையை அவரிடம் பெறுமாறு கூறி உள்ளார். மூன்று வாரங்கள் வாகனம் ஓட்டிய நிலையில், அதற்கான பணத்தை தருமாறு பழனிசாமியிடம் தமிழ்செல்வன் கேட்டு உள்ளார்.

இதல் ஆத்திரமடைந்த பழனிசாமி ஜாதி ரீதியாக திட்டி அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 30ம் தேதி சுல்தான்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வழக்குபதிவு செய்யப்பட்டு பல நாட்கள் ஆகியும் இதுவரை பழனிசாமியை கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக குற்றம் சாட்டி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். மேலும், தன்னை தாக்கியவர்கள் வழக்கை வாபஸ் பெற நிர்ப்பந்தம் செய்வதுடன் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தமிழ்செல்வன் தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...