கோவை: கோவை மதுக்கரை அடுத்த திருமலையாம் பாளையம் பகுதியைச் சேர்ந்த பெண்கள் பலமுறை விதவைகள் உதவித் தொகை கிடைக்கப் பெற மனு அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை: கோவை மதுக்கரை அடுத்த திருமலையாம் பாளையம் பகுதியைச் சேர்ந்த பெண்கள் பலமுறை விதவைகள் உதவி தொகை கிடைக்கப் பெற மனு அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து சகுந்தலா என்ற பெண் கூறுகையில், தனது கணவர் இறந்து ஐந்து ஆண்டுகள் ஆன நிலையில், மதுக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும், பல்வேறு காரணங்கள் கூறி இதுவரை தனது மனு ஏற்றுக் கொள்ளப்படவில்லை என தெரிவித்தார்.
மேலும், இரு குழந்தைகள் உள்ள நிலையில் உதவி தொகை கிடைக்கப் பெற்றால் வாழ்வாதார மேம்பாட்டிற்கு உதவிகரமாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
இதேபோல், அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்கள் அளித்து உள்ளதாகவும் விதவைகள் உதவி தொகை கிடைக்கப் பெற மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்து உள்ளதாக தெரிவித்தனர்.
இது குறித்து சகுந்தலா என்ற பெண் கூறுகையில், தனது கணவர் இறந்து ஐந்து ஆண்டுகள் ஆன நிலையில், மதுக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும், பல்வேறு காரணங்கள் கூறி இதுவரை தனது மனு ஏற்றுக் கொள்ளப்படவில்லை என தெரிவித்தார்.
மேலும், இரு குழந்தைகள் உள்ள நிலையில் உதவி தொகை கிடைக்கப் பெற்றால் வாழ்வாதார மேம்பாட்டிற்கு உதவிகரமாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
இதேபோல், அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்கள் அளித்து உள்ளதாகவும் விதவைகள் உதவி தொகை கிடைக்கப் பெற மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்து உள்ளதாக தெரிவித்தனர்.