கூடலூர் அருகே தண்ணீர் எடுப்பதற்காக சென்ற பெண்ணை யானை தாக்கியதில் உயிரிழப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டம், கூடலூர், கோக்கால் பகுதியில் தண்ணீர் எடுப்பதற்காக சென்ற கமலாச்சி என்ற பெண்ணை, யானை தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம், கூடலூர், கோக்கால் பகுதியில் தண்ணீர் எடுப்பதற்காக சென்ற கமலாச்சி என்ற பெண்ணை, யானை தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.

கூடலூர், கோக்கால் பகுதியில் யானைகள் அவ்வப்போது ஊருக்குள் வருவது வழக்கம். இந்நிலையில், இன்று தண்ணீர் எடுப்பதற்காக கமலாச்சி என்ற பெண்மணி சென்றபோது புதருக்குள் நின்றிருந்த காட்டு யானை அவரை தாக்கியது.

இதில், படுகாயமடைந்த கமலாச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து, அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், இந்த பகுதியில் அடிக்கடி யானைகள் நடமாட்டம் இருந்து வருகிறது. வனத்துறைக்கு புகார் தெரிவித்தாலும், ஒரிரு நாள் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். இதனால், பொது மக்களுக்கு எந்தவித பலனும் கிடைப்பதில்லை என்று குற்றம் சாட்டினர்.



இதனால், மேலும் உயிர் மற்றும் பொருள் சேதங்கள் ஏற்படும் முன், இங்கு சுற்றித்திரியும் காட்டு யானைகளை உடனடியாக அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் துரத்தி, நிறந்தர தீர்வு காண வேண்டும், என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இப்பிரச்சினைக்கு, நிறந்தர தீர்வு ஏற்படவில்லை என்றால், வனத்துறையை கண்டித்து போராட்டம் நடத்தப்படும், என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...