கோவை கிணத்துக்கடவில் நகர பொறுப்பில் இருந்த கட்சி நிர்வாகிகள் நீக்கத்தைக் கண்டித்து திமுகவினர் உண்ணாவிரதப் போராட்டம்!

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவில் நகர பொறுப்பில் இருந்த, கட்சி நிர்வாகிகள் நீக்கத்தை கண்டித்து, திமுகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவில் நகர பொறுப்பில் இருந்த, கட்சி நிர்வாகிகள் நீக்கத்தைக் கண்டித்து, திமுகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை தெற்கு மாவட்டம் முழுவதும் திமுகவின் நிர்வாக வசதிக்காக நகரம், ஒன்றியம் என பிரிக்கப்பட்டு, புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்,

இந்நிலையில், கிணத்துக்கடவு நகர பொறுப்பில் இருந்த நிர்வாகிகளை, ஒட்டுமொத்தமாக நீக்கிவிட்டு, புதிய நிர்வாகிகள், பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.



இதனால் சுமார் 40 ஆண்டுகளாக திமுக கட்சிக்காக பாடுபட்ட நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்து, எந்த ஒரு விசாரணையும் நடத்தாமல் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதைக் கண்டித்து இன்று கிணத்துக்கடவில் திமுகவினர் திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



சுமார் 20 முதல் 40 ஆண்டுகள் வரை திமுக கட்சிக்காக பாடுபட்ட எங்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றிக்கு பாடுபட்ட எங்களை எந்தவித விசாரணையும் நடத்தாமல் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டது வருத்தம் அளிப்பதாக தெரிவித்தனர்.

எனவே, கட்சித் தலைமை உரிய விசாரணை நடத்தி பொறுப்பை அளிக்க வேண்டும் என்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட திமுகவினர் தெரிவித்தனர். கட்சிப் பொறுப்பு பறிக்கப்பட்டதைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தை திமுகவினரே நடத்தியது அக்கட்சியின் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...