கோவையில் 9 வருடங்களுக்கு முன் மாணவிக்கு ஆபாச செய்தி அனுப்பிய ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது

கோவை: கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த 19 வயது மாணவி அளித்துள்ள புகாரின் பேரில், அவர் பள்ளியில் பயின்ற போது அவருக்கு ஆபாச செய்தி அனுப்பிய ஆசிரியர் மீது இராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு போக்சோ சட்டின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


கோவை: கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த 19 வயது மாணவி அளித்துள்ள புகாரின் பேரில், அவர் பள்ளியில் பயின்ற போது அவருக்கு ஆபாச செய்தி அனுப்பிய ஆசிரியர் மீது இராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு போக்சோ சட்டின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தனியார் கல்லூரியில் இளங்கலை இரண்டாமாண்டு படித்து வரும் 18 வயதுடைய மாணவி, கோவை இராமநாதபுரத்திலுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அதில், அவர் பள்ளியில் படிக்கும்போது, திறன் மேம்பாடு மற்றும் ஆங்கில புலமை குறித்து சாமுவேல் ஜெய்சங்கர் (39) என்ற ஆசிரியர் பாடம் நடத்தி வந்த நிலையில், மாணவிகளின் செல் போன் எண்களை வாங்கியவர், திறன் மேம்பாடு மற்றும் ஆங்கில புலமை குறித்த தகவல்களை அனுப்பி வந்துள்ளார்.

இதனையடுத்து, அந்த ஆசிரியர், புகார் அளித்துள்ள மாணவியின் அலைபேசிக்கு ஆபாச தகவல்கள் மற்றும் புகைப்படங்களை அனுப்பி வந்ததால், அவரது எண்ணை மாணவி, துண்டித்துள்ளார். இதனையடுத்து, கடும் மன உளைச்சலில் இருந்த மாணவி, யாரிடமும் ஒன்றும் சொல்லாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில், தற்போது போஸ்கோ சட்டத்தில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை அறிந்து, 9 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு நேர்ந்த பிரச்சனைகள் குறித்து இராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து, காவல் துறையினர் சாமுவேல் ஜெய்சங்கரை விசாரித்து அவரை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தனர்.

9 ஆண்டுகளுக்கு முன்பு ஆபாச குறுங்செய்தி மற்றும் புகைப்படம் அனுப்பிய ஆசிரியர் கைது செய்யப்பட்டிருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...