கோவையில் 9 வருடங்களுக்கு முன் மாணவிக்கு ஆபாச செய்தி அனுப்பிய ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது

கோவை: கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த 19 வயது மாணவி அளித்துள்ள புகாரின் பேரில், அவர் பள்ளியில் பயின்ற போது அவருக்கு ஆபாச செய்தி அனுப்பிய ஆசிரியர் மீது இராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு போக்சோ சட்டின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


கோவை: கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த 19 வயது மாணவி அளித்துள்ள புகாரின் பேரில், அவர் பள்ளியில் பயின்ற போது அவருக்கு ஆபாச செய்தி அனுப்பிய ஆசிரியர் மீது இராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு போக்சோ சட்டின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தனியார் கல்லூரியில் இளங்கலை இரண்டாமாண்டு படித்து வரும் 18 வயதுடைய மாணவி, கோவை இராமநாதபுரத்திலுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அதில், அவர் பள்ளியில் படிக்கும்போது, திறன் மேம்பாடு மற்றும் ஆங்கில புலமை குறித்து சாமுவேல் ஜெய்சங்கர் (39) என்ற ஆசிரியர் பாடம் நடத்தி வந்த நிலையில், மாணவிகளின் செல் போன் எண்களை வாங்கியவர், திறன் மேம்பாடு மற்றும் ஆங்கில புலமை குறித்த தகவல்களை அனுப்பி வந்துள்ளார்.

இதனையடுத்து, அந்த ஆசிரியர், புகார் அளித்துள்ள மாணவியின் அலைபேசிக்கு ஆபாச தகவல்கள் மற்றும் புகைப்படங்களை அனுப்பி வந்ததால், அவரது எண்ணை மாணவி, துண்டித்துள்ளார். இதனையடுத்து, கடும் மன உளைச்சலில் இருந்த மாணவி, யாரிடமும் ஒன்றும் சொல்லாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில், தற்போது போஸ்கோ சட்டத்தில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை அறிந்து, 9 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு நேர்ந்த பிரச்சனைகள் குறித்து இராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து, காவல் துறையினர் சாமுவேல் ஜெய்சங்கரை விசாரித்து அவரை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தனர்.

9 ஆண்டுகளுக்கு முன்பு ஆபாச குறுங்செய்தி மற்றும் புகைப்படம் அனுப்பிய ஆசிரியர் கைது செய்யப்பட்டிருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...