திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்து முன்னணியினர் திருப்பூரில் ஆர்பாட்டம்..!

திருப்பூர்: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சமூக வலைதளத்தில் பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக எதிர்ப்புகள் கிளம்பி உள்ள நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, திருப்பூரில் இந்து முன்னணியினர், அவரது உருவ படத்தை கிழித்து, இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சமூக வலைதளத்தில் பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக எதிர்ப்புகள் கிளம்பி உள்ள நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, திருப்பூரில் இந்து முன்னணியினர், அவரது உருவ படத்தை கிழித்து, இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் இந்து முன்னணி அமைப்பு சார்பில், குமரன் சிலை அருகில் ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்து பெண்களை கொச்சையாக பேசியுள்ளார் என்று குற்றம் சாட்டினார்.

"மேலும், இந்து சாஸ்திரங்களில் இருக்கும் கருத்துகள் கொச்சையாக இருக்கின்றது, என பொய்யான கருத்தை தெரிவித்துள்ளார். இது வேண்டுமென்றே ஒரு மதத்தினரை புன்படுத்துவதாக உள்ளது. இது, பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. எனவே, திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டது. 



மேலும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், திருமாவளவன் புகைப்படத்தை கிழித்து, அதை தீயிட்டு எரிக்க முயன்றனர். அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். இதனால், சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...