கோவை: கோவை காந்திபுரம், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் திமுக தலைவர் ஸ்டாலினை கிண்டல் செய்யும் விதமாக ஒட்டபட்ட சுவரொட்டிகளால் திமுகவினர் இடையே பரபரப்பு நிலவியது.
கோவை: கோவை காந்திபுரம், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் திமுக தலைவர் ஸ்டாலினை கிண்டல் செய்யும் விதமாக ஒட்டபட்ட சுவரொட்டிகளால் திமுகவினர் இடையே பரபரப்பு நிலவியது.
திமுக தலைவர் ஸ்டாலினை, இம்சை அரசன் 23 ம் புலிகேசியாகவும், திமுக பொதுச்செயலாளர் துரை முருகனை, மங்குனி அமைச்சராகவும் சித்தரித்து கிண்டல் செய்யும் வகையில், கோவையின் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
மேலும், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி படத்துடன் தன்னம்பிக்கை மிக்க தலைமையா? இல்லை, துண்டுச்சீட்டு தலைமையா? என்ற வாசகங்களும் போஸ்டர்களில் அச்சடிக்கப்டபட்டிடருந்தது.

மேலும், திமுக குடும்ப அரசியலை செய்து வருவது போன்று, ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் படத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி படத்துடன் ஒப்பிட்டு உழைப்பை நம்பலாமா?, பிறப்பை நம்பலாமா? என்ற வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், கோவையின் சில முக்கிய பகுதிகளில் பகுதியில் ஒட்டப்பட்டு இருந்த இந்த சுவரொட்டிகளை திமுக தொண்டர்கள் கிழிதெரிந்தனர். மேலும், இது குறித்து காட்டூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
