காரை துரத்தும், காட்டு யானை..! டாப்சிலிப் மலை பகுதியா? என வனத்துறையினர் விசாரணை

காரை துரத்தும், காட்டு யானை..! டாப்சிலிப் மலை பகுதியா? என வனத்துறையினர் விசாரணை



 பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள டாப்சிலிப், கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமாக உள்ளது. இங்கு காட்டு யானை, சிறுத்தை புலி, புலி, புள்ளி மான் உள்ளிட்ட அரிய வகை விலங்குகள் உள்ளன. 

ஊரடங்கு காரணமாக, கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டடாப்சிலிப் சுற்றுலாத் தலம் இன்னும் திறக்கப்படாமல், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. 

குறிப்பாக, டாப்சிலிப் பகுதிக்கு வனத்துறையினர் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், டாப்சிலிப் செல்லும் மலைப்பாதையில் காட்டு யானை ஒன்று காரை ஒன்றை துரத்தும் வீடியோ காட்சி, வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இது தொடர்பாக, வனத்துறையினரிடம் கேட்ட.போது, டாப்சிலிப்பகுதிக்கு வெளியாட்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. வனத்துறை ஊழியர்கள் மலைவாழ் மக்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு வரும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறது, என்றனர். 

தற்போது, சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் வீடியோ, டாப்சிலிப் பகுதியில் நடந்தது போல் தெரியவில்லை.

இருப்பினும், சமூக வலைதளங்களில் டாப்சிலிப் என்று குறிப்பிட்டு வீடியோ பகிரப்பட்டு வருவதால் அது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக, தெரிவித்தனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...