கோவை: கோவை மதுக்கரையில் உடல் நிலை மோசமாக உள்ள கரடிக்கு வனத்துறையினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கோவை: கோவை மதுக்கரையில் உடல் நிலை மோசமாக உள்ள கரடிக்கு வனத்துறையினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கோவை மதுக்கரை சரக வனத்திற்கு உட்பட்ட கருண்யா காவல் நிலையத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தனியார் வயலில் ஒரு வயதான உடல் சோர்ந்த நிலையில் கரடியை பொதுமக்கள் கண்டுள்ளனர்.
இது குறித்து கோவை வன கால்நடை அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கரடியை பரிசோதித்த மருத்துவர், அதன் பற்கள் தேய்ந்து இருப்பதாகவும், கரடியின் பின்பகுதி செயல் இழந்து மிகவும் சோர்ந்த நிலையில் இருப்பதாக கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து, கரடிக்கு மருந்து செலுத்தி கூண்டிற்கு மாற்றி சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. வயதாக இருப்பதால் பின்பகுதி செயல் இழந்து இருப்பதால் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. மருத்துவர் குழு, கரடியை தொடர்ந்து கண்காணித்து வருவதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மதுக்கரை சரக வனத்திற்கு உட்பட்ட கருண்யா காவல் நிலையத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தனியார் வயலில் ஒரு வயதான உடல் சோர்ந்த நிலையில் கரடியை பொதுமக்கள் கண்டுள்ளனர்.
இது குறித்து கோவை வன கால்நடை அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கரடியை பரிசோதித்த மருத்துவர், அதன் பற்கள் தேய்ந்து இருப்பதாகவும், கரடியின் பின்பகுதி செயல் இழந்து மிகவும் சோர்ந்த நிலையில் இருப்பதாக கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து, கரடிக்கு மருந்து செலுத்தி கூண்டிற்கு மாற்றி சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. வயதாக இருப்பதால் பின்பகுதி செயல் இழந்து இருப்பதால் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. மருத்துவர் குழு, கரடியை தொடர்ந்து கண்காணித்து வருவதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.