பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், உடந்தையாக இருந்த பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், உடந்தையாக இருந்த பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்து பணிமனை ஊழியர் தங்கவேல் (65), அவரது மனைவி அய்யம்மாள்(55). இவர் தலைமை ஆசிரியராக பணியாற்றும் தொடக்கப் பள்ளியில் பயிலும், ஐந்தாம் வகுப்பு மாணவிக்கு, தங்கவேல் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக மாணவியின் பெற்றோர்கள், பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் நேற்று முன்தினம், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தங்கவேல் மற்றும் அதற்கு உடந்தையாக செயல்பட்ட அவரது மனைவி, தலைமையாசிரியை அய்யம்மாள் ஆகிய இருவர் மீதும் மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை அய்யமாளை பணியிடை நீக்கம் செய்ய மாவட்ட கல்வித் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் உடந்தையாக செயல்பட்ட தலைமை ஆசிரியர் குறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வட்டார கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, தலைமை ஆசிரியை அய்யம்மாள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.