Update: பொள்ளாச்சியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், உடந்தையாக இருந்த பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், உடந்தையாக இருந்த பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.



பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், உடந்தையாக இருந்த பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்து பணிமனை ஊழியர் தங்கவேல் (65), அவரது மனைவி அய்யம்மாள்(55). இவர் தலைமை ஆசிரியராக பணியாற்றும் தொடக்கப் பள்ளியில் பயிலும், ஐந்தாம் வகுப்பு மாணவிக்கு, தங்கவேல் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. 

இது தொடர்பாக மாணவியின் பெற்றோர்கள், பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் நேற்று முன்தினம், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தங்கவேல் மற்றும் அதற்கு உடந்தையாக செயல்பட்ட அவரது மனைவி, தலைமையாசிரியை அய்யம்மாள் ஆகிய இருவர் மீதும் மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை அய்யமாளை பணியிடை நீக்கம் செய்ய மாவட்ட கல்வித் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் உடந்தையாக செயல்பட்ட தலைமை ஆசிரியர் குறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வட்டார கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். 

இதையடுத்து, தலைமை ஆசிரியை அய்யம்மாள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...