உதகை நகராட்சியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இரண்டு மாதம் சம்பளம் வழங்காததால் 750க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

நீலகிரி: உதகை நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இரண்டு மாத காலமாக சம்பளம் வழங்காததால் 750க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி: உதகை நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இரண்டு மாத காலமாக சம்பளம் வழங்காததால் 750க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மலை மாவட்டமான நீலகிரியில் மாவட்டத்தில் உள்ள உதகை நகராட்சி மிகவும் முக்கியம் வாய்ந்த நகராட்சியாகும். ஆண்டுக்கு 33 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில் உதகை நகரை சுத்தம் செய்து, தூய்மையாக வைத்துக்கொள்வதில் சிறந்த நகராட்சியாக உதகை நகராட்சி செயல்பட்டு வந்த நிலையில் அண்மைக்காலமாக நகராட்சி நிர்வாகம் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் காலதாமதம் செய்து வருகிறது. 

நகராட்சி அலுவலக ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், ஓட்டுனர்கள் என மொத்தம் 750 பேர் பணிபுரிந்து வரும் நிலையில், கடந்த 2 மாதமாக சம்பளம் வழங்காததால் ஆத்திரம் அடைந்த ஊழியர்கள் உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும், அத்துடன் நிலுவைத் தொகை உட்பட அனைத்து கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என கோரி நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது நகராட்சியில் போதிய நிதி இல்லாததால் உரிய நேரத்தில் சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

Newsletter

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...