கோவையில் கழுத்து அறுக்கப்பட்டு அழுகிய நிலையில், பிளாஸ்டிக் டிரம்மில் அடைக்கப்பட்ட திருநங்கை பிணம்; போலீசார் தீவிர விசாரணை

கோவை: கோவையில் டிரான்ஸ் கிச்சன் என்ற உணவகத்தை நடத்தி வந்த சங்கீதா என்ற திருநங்கை கோவை சாயிபாபா காலனி பகுதியில் உள்ள அவரது வீட்டில், உடலில் வெட்டு காயங்களுடன் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக பிளாஸ்டிக் டிரம்மில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவையில் டிரான்ஸ் கிச்சன் என்ற உணவகத்தை நடத்தி வந்த சங்கீதா என்ற திருநங்கை கோவை சாயிபாபா காலனி பகுதியில் உள்ள அவரது வீட்டில், உடலில் வெட்டு காயங்களுடன் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக பிளாஸ்டிக் டிரம்மில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை சாயிபாபா காலனி என்.எஸ்.ஆர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் திருநங்கை சங்கீதா(60). இவர், கோவையிலுள்ள திருநங்கைகள் நல்வாழ்வு மேம்பாட்டிற்கு, சாலை ஓர உணவகம் அமைக்க என பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுத்து வந்துள்ளார்.

இவர் சமீபத்தில், வடகோவை பகுதியில் டிரான்ஸ் கிட்சன் என்ற உணவு விடுதியை சக திருநங்கைகளை கொண்டு துவங்கினார். தமிழகத்தில் இந்த உணவகம் முழுக்க முழுக்க திருநங்கைகளால் துவங்கப்பட்டு செயல்பட்டு வந்த முதல் உணவகம் ஆகும்.இந்த உணவகத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வந்தது.



இந்நிலையில் திருநங்கை சங்கீதா கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்து பிளாஸ்டிக் டிரம்மில் அடைக்கப்பட்ட நிலையில், அவரது உடல் இன்று மீட்கப்பட்டது. சாய்பாபா காலனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் அருகே உள்ள அவரது குடியிருக்கும் பகுதியில் பலத்த துர்நாற்றம் வீசியுள்ளது. இதனையடுத்து, அருகில் உள்ளவர்கள் சாய்பாபா காலனி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.



சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கு சோதனை செய்தபோது வீட்டின் பின்புறம் பிளாஸ்டிக் டிரம் ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசியது கண்டு பிளாஸ்டிக் டிரம்மை திறந்து பார்த்த போது, அதனுள் அழுகிய நிலையில் சங்கீதா கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், இறந்த அந்த நபர் திருநங்கை சங்கீதாதான் என்பதை உறுதி செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதிக்கு மோப்ப நாய்கள் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேற்கொண்டு நடத்திய முதல் கட்ட விசாரணையில், அவர் கொலை செய்யப்பட்டு மூன்று நாட்கள் ஆகி இருக்கலாம், எனவும் அவரைக் கொன்று பிளாஸ்டிக் ட்ரம்முக்குள் அடைத்து மர்ம நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர் என்று கூறப்படுகிறது.

இந்த கொலை சம்பவம் குறித்து சாய்பாபா காலனி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடியிருப்புப் பகுதிகளுக்கு நடுவே அழுகிய நிலையில் திருநங்கை சங்கீதா சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.



மேலும், அவர் தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா? இல்லை வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...