பொள்ளாச்சியில் இரு தினங்களில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; மொத்த பாதிப்பு 1,034 ஆக உயர்வு

கோவை: பொள்ளாச்சியில் இரு தினங்களில் 14 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 1,034 ஆக உயர்ந்துள்ளது எனவும், இதுவரை 31 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: பொள்ளாச்சியில் இரு தினங்களில் 14 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 1,034 ஆக உயர்ந்துள்ளது எனவும், இதுவரை 31 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் நோய் தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களில் 14 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் நேற்று, பொள்ளாச்சி குமரன் நகர், 80 வயது முதியவர், மாக்கினாம்பட்டி, 27 வயது ஆண், 29வயது ஆண் (இரண்டு பேரும் காவல்துறையை சேர்ந்தவர்கள்), மாக்கினாம்பட்டி மகாலட்சுமி நகர், 33 வயது பெண், கந்தசாமிபுரம், 25 வயது பெண் மற்றும் கானல் புதூர், 70 வயது முதியவர் மற்றும் ஆனைமலை பகுதியை சேர்ந்த மூன்று பேர், கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த 68 வயது ஆண், சென்னியூர் பகுதியில் 70 வயது ஆண், கிணத்துக்கடவு பகுதியில் சிக்கலாம்பாளையத்தைச் சேர்ந்த 36 வயது ஆணுக்கும், காளிபாளையம் சேர்ந்த 45 வயது ஆணுக்கும், என 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று, பொள்ளாச்சி நந்தனார் காலனி, 52 வயது பெண், உடுமலை நாராயணன் காலனி, 22 வயது பெண், சிஞ்சுவாடி, 25 வயது பெண், 47 வயது பெண், கஞ்சம்பட்டி, 36 வயது பெண், வக்கம்பாளையம், 55 வயது ஆண், ஜமீன் ஊத்துக்குளி, 79 வயது முதியவர், கிணத்துக்கடவு பகுதியில் சிக்கலாம் பாளையத்தைச் சேர்ந்த 36 வயது ஆண், காளிபாளையம் சேர்ந்த 45 வயது ஆண் என 9 பெருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,034ஆக உயர்ந்துள்ளது.

Newsletter

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...