நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் வேகமாக பரவிவரும் கொரோனா தொற்று காரணமாக சோதனைச் சாவடிகளில் இபாஸ் இல்லாமல் உள்ளே வருபவர்களை வருவாய் மற்றும் காவல் அதிகாரிகள் திருப்பி அனுப்பி வந்தாலும், சிலர் பல்வேறு குறுக்கு வழிகளில் நீலகிரிக்குள் நுழைந்து விடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் வேகமாக பரவிவரும் கொரோனா தொற்று காரணமாக சோதனைச் சாவடிகளில் இபாஸ் இல்லாமல் உள்ளே வருபவர்களை வருவாய் மற்றும் காவல் அதிகாரிகள் திருப்பி அனுப்பி வந்தாலும், சிலர் பல்வேறு குறுக்கு வழிகளில் நீலகிரிக்குள் நுழைந்து விடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 80 பேருக்கு நோய் தொற்று உறுதியாகி வரும் நிலையில், நீலகிரிக்கு வருபவர்கள், கட்டாயம் இ பாஸ் வைத்திருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி ஆன்லைன் மூலம் சுற்றுலா என்று பதிவிட்டு வந்தால் நாளொன்றுக்கு 150 நபர்களுக்கு இபாஸ்களை அனுமதிக்கின்றனர்.

அதேபோல, நீலகிரிக்கு வரும் 16 சோதனை சாவடிகளில் தற்போது கர்நாடகா, கேரளாவில் இருந்து நீலகிரிக்குள் வரும் கல்லட்டி, கக்க நல்லா உள்ளிட்ட 4 சோதனை சாவடிகளில் இ பாஸ் இல்லாமல் நீலகிரிக்குள் வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.
இருப்பினும் சிலர் பல்வேறு குறுக்கு வழிகளில் மாவட்டத்திற்குள் நுழைவது தொடர்கதையாக உள்ளதால் இதனை அதிகாரிகள் அவ்வப்போது ஆராய்ந்து கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 80 பேருக்கு நோய் தொற்று உறுதியாகி வரும் நிலையில், நீலகிரிக்கு வருபவர்கள், கட்டாயம் இ பாஸ் வைத்திருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி ஆன்லைன் மூலம் சுற்றுலா என்று பதிவிட்டு வந்தால் நாளொன்றுக்கு 150 நபர்களுக்கு இபாஸ்களை அனுமதிக்கின்றனர்.
அதேபோல, நீலகிரிக்கு வரும் 16 சோதனை சாவடிகளில் தற்போது கர்நாடகா, கேரளாவில் இருந்து நீலகிரிக்குள் வரும் கல்லட்டி, கக்க நல்லா உள்ளிட்ட 4 சோதனை சாவடிகளில் இ பாஸ் இல்லாமல் நீலகிரிக்குள் வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.
இருப்பினும் சிலர் பல்வேறு குறுக்கு வழிகளில் மாவட்டத்திற்குள் நுழைவது தொடர்கதையாக உள்ளதால் இதனை அதிகாரிகள் அவ்வப்போது ஆராய்ந்து கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்துள்ளது.