கோவையில் சாலையோரத்தில் உறங்கி கொண்டிருந்தவர் தலையில் கல்லை போட்டதில் ஒருவர் உயிரிழப்பு - போலீசார் விசாரணை!

கோவை: கோவையில் சாலையோரத்தில் படுத்து உறங்கி கொண்டிருந்தவர் தலையில் கல்லை போட்டதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவையில் சாலையோரத்தில் படுத்து உறங்கி கொண்டிருந்தவர் தலையில் கல்லை போட்டதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையில் அரசு மருத்துவமனை, காந்திபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் ஆதரவற்ற முதியோர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சாலைகளில் இரவு நேரங்களில் படுத்து உறங்குகின்றனர். சமூக ஆர்வலர்கள் மற்றும் கோவில்களில் அன்னதானம் என கிடைப்பதை சாப்பிட்டு வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று இரவு காந்திபுரம் நஞ்சப்பா சாலை ஓரத்தில் படுத்திருந்த ஒருவரின் தலையில் மர்ம நபர்கள் கல்லை போட்டு தாக்கி உள்ளனர். ரத்த வெள்ளத்தில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைக்க பெற்றது.

இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற காட்டூர் போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பதும் குடிபோதையில் வந்த 2 நபர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தலையில் கல்லை போட்டுவிட்டு சென்றுள்ளது தெரியவந்தது.

இந்நிலையில், படுகாயம் அடைந்த உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த பாலகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து உள்ள காட்டூர் போலீசார் தலையில் கல்லைப்போட்டு கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். இதனிடையே, இந்த சம்பவத்தில் தொடர்பு உடையதாக கருதப்படும் ஒரு நபரை பிடித்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.06.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...