கோவையில் சாலையோரத்தில் உறங்கி கொண்டிருந்தவர் தலையில் கல்லை போட்டதில் ஒருவர் உயிரிழப்பு - போலீசார் விசாரணை!

கோவை: கோவையில் சாலையோரத்தில் படுத்து உறங்கி கொண்டிருந்தவர் தலையில் கல்லை போட்டதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவையில் சாலையோரத்தில் படுத்து உறங்கி கொண்டிருந்தவர் தலையில் கல்லை போட்டதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையில் அரசு மருத்துவமனை, காந்திபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் ஆதரவற்ற முதியோர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சாலைகளில் இரவு நேரங்களில் படுத்து உறங்குகின்றனர். சமூக ஆர்வலர்கள் மற்றும் கோவில்களில் அன்னதானம் என கிடைப்பதை சாப்பிட்டு வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று இரவு காந்திபுரம் நஞ்சப்பா சாலை ஓரத்தில் படுத்திருந்த ஒருவரின் தலையில் மர்ம நபர்கள் கல்லை போட்டு தாக்கி உள்ளனர். ரத்த வெள்ளத்தில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைக்க பெற்றது.

இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற காட்டூர் போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பதும் குடிபோதையில் வந்த 2 நபர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தலையில் கல்லை போட்டுவிட்டு சென்றுள்ளது தெரியவந்தது.

இந்நிலையில், படுகாயம் அடைந்த உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த பாலகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து உள்ள காட்டூர் போலீசார் தலையில் கல்லைப்போட்டு கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். இதனிடையே, இந்த சம்பவத்தில் தொடர்பு உடையதாக கருதப்படும் ஒரு நபரை பிடித்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...