கோவையில் வன விலங்குகளுக்கு பிடித்தமான தாவரங்களை வளர்க்கும் முயற்சியில் வனத்துறையினர்..!

கோவை: கோவையில் வன விலங்குகளுக்கு பிடித்தமான தாவரங்களை வளர்க்க வனத்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர்.


கோவை: கோவையில் வன விலங்குகளுக்கு பிடித்தமான தாவரங்களை வளர்க்க வனத்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் வனச்சரகம் முக்கியமான இடமாகும். மாதத்திற்கு நூற்றுக்கணக்கான யானைகள் கடக்கும் பகுதியாக அவ்வழித்தடம் அமைந்துள்ளது.

பொதுவாக யானைகள் உணவு தேவைக்காகவும், நீர் தேவைக்காவும் மட்டுமே ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வலசை செல்கிறது. ஒரு வேளை யானை அல்லது ஏனைய வனவிலங்குகள் பாதையை கடக்கும் போது மனித இடர்பாடுகள் இருப்பின் அங்கு மனித விலங்கு மோதல் ஏற்படுவதாக சுற்றுச்சூழல் செயற்பட்டாளர்கள் கூறுகின்றனர்.

இதனிடையே, கடந்த சில காலமாக வன விலங்குகளுக்கு உணவு பற்றாக்குறை ஏற்படுகிறது. அதை நிவர்த்தி செய்யும் நோக்கில் வனத்துறை சார்பில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் தயார் செய்யப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் ஜக்கானரி, கல்லாறு, உழிகல், சுண்டப்பட்டி, கண்டியூர், நெல்லலிமலை என 6 பீட்கள் உள்ளன. வனப்பகுதியில் ஓடும் பவானி ஆறு, கோத்தகிரி கல்லாறு ஆகிய நீர் பகுதிகளை வனவிலங்குகள் பயன்படுத்தி வருகின்றன.

மேலும், வறண்ட காலத்தில் வனப்பகுதிகளில் நீர்தேக்க தொட்டிகளும் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. மழைக்காலம் ஆரம்பித்தவுடன் வேம்பு, அத்தி, புங்கை, காட்டு எலுமிச்சை, அரசமரம், வாகை என 20 வகையான மர நாற்றுக்களை 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட மரக்கன்றுகளாக உருவாக்கி வனப்பகுதியில் நட உள்ளதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...