கோவை: அதிமுக கட்சியின் 49ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கோவை அவினாசி சாலையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கோவை: அதிமுக கட்சியின் 49ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கோவை அவினாசி சாலையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதிமுக கட்சியின் 49ம் ஆண்டு தொடக்க விழா தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த ஊரான எடப்பாடி சிலுவம்பாளையம் கிராமத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.

இதன் ஒரு பகுதியாக, அதிமுக கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூனன் தலைமையில் கட்சியினர் கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்றவர்கள் அவினாசி சாலையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர், அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆர் ஜெயலலிதா உருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்தனர். இதன் பின்னர் கட்சி கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மேயர்கள் செ.ம.வேலுச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அதிமுக கட்சியின் 49ம் ஆண்டு தொடக்க விழா தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த ஊரான எடப்பாடி சிலுவம்பாளையம் கிராமத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.
இதன் ஒரு பகுதியாக, அதிமுக கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூனன் தலைமையில் கட்சியினர் கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்றவர்கள் அவினாசி சாலையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர், அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆர் ஜெயலலிதா உருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்தனர். இதன் பின்னர் கட்சி கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மேயர்கள் செ.ம.வேலுச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.