கழகப்பொருளாளர்‌ வெற்றிவேல்‌ மறைவு செய்தி கேட்டு கலங்கி நிற்கிறேன்‌; ஆறுதல்‌ சொல்ல வார்த்தைகள்‌ இன்றி தவிக்கிறேன்‌ - டிடிவி தினகரன் இரங்கல்

சென்னை: அம்மா மக்கள்‌ முன்னேற்றக்‌ கழகத்தின்‌ பொருளாளரும்‌, எனது இனிய நண்பருமான திரு வெற்றிவேல்‌, அவர்கள்‌ மறைந்தார்‌ என்ற செய்தியை நம்பமுடியாமல்‌ தவிக்கிறேன்‌. மிகுந்த வேதனையும்‌ சொல்ல முடியாத துயரமும்‌ என்‌ தொண்டையை அடைக்கிறது, என அ.ம.மு.க கட்சியின் பொது செயலாளர், டிடிவி தினகரன் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


சென்னை: அம்மா மக்கள்‌ முன்னேற்றக்‌ கழகத்தின்‌ பொருளாளரும்‌, எனது இனிய நண்பருமான திரு வெற்றிவேல்‌, அவர்கள்‌ மறைந்தார்‌ என்ற செய்தியை நம்பமுடியாமல்‌ தவிக்கிறேன்‌. மிகுந்த வேதனையும்‌ சொல்ல முடியாத துயரமும்‌ என்‌ தொண்டையை அடைக்கிறது, என அ.ம.மு.க கட்சியின் பொது செயலாளர், டிடிவி தினகரன் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அ.ம.மு.க பொருளாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல், கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று மாலை காலமானார்.

சென்னை தனியார் மருத்துவமனையில் இரண்டு வாரமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் உடல் நிலை சில தினங்களாக மோசம் அடைந்து வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிர் பிரிந்தது.

அவரது மறைவு குறித்து இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள, கட்சியின் பொது செயலாளர், டிடிவி தினகரன், "புரட்சித்தலைவி அம்மா மற்றும்‌ தியாகத்தலைவி சின்னம்மா அவர்களின்‌ பேரன்பைப்‌ பெற்றவர்‌. என்‌ மீது அளவிட முடியாத பாசம்‌ கொண்டவர்‌. எதையும்‌ உரிமையோடு பளிச்சென பேசுபவர்‌. 'என்ன நடந்தாலும்‌ நான்‌ தியாகத்தின்‌ பக்கம்‌, உண்மையின்‌ பக்கமே நிற்பேன்‌' என்று உறுதிபடச்‌ சொல்லி, இறுதிவரை கழகத்தின்‌ மீது அளப்பரிய அன்பு கொண்டிருந்தவர்‌.

துரோகத்திற்கு எதிராக நாம்‌ நடத்தி வருகிற புனிதப்‌ போரில்‌ ஒரு தளபதியாக நம்மோடு களத்தில்‌ நின்றவர்‌. 'வெற்றி... வெற்றி' என வாய்‌ நிறைய அழைத்து, இனி யாரிடம்‌ பேசப்போகிறோம்‌ என்று நினைக்கிற போதே, எதற்காகவும்‌ கலங்காத என்‌ உள்ளம்‌ கலங்கித்‌ தவிக்கிறது. திரு.வெற்றிவேல்‌ அவர்களின்‌ மறைவு கழகத்திற்கும்‌, தனிப்பட்ட முறையில்,‌ எனக்கும்‌ ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.

அவரது மறைவால்‌ வாடும்‌ குடும்பத்தினருக்கும்‌, கழகத்தினருக்கும்‌ ஆறுதல்‌ சொல்ல வார்த்தைகளின்றி தவிக்கிறேன்‌. நம்முடைய லட்சியப்பயணத்தில்‌ 'வெற்றிவேல்‌' என்கிற பெயர்‌ எப்போதும்‌ நிலைத்திருக்கும்‌. அவரது ஆன்மா இறைவன்‌ திருவடி நிழலில்‌ இளைப்பாற வேண்டுகிறேன்‌", என்று வேதனைப்பட தெரிவித்துள்ளார்.

Newsletter

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....