கோவை: நடிகர் கமலஹாசன் பிறந்தநாள் சுவர் விளம்பரங்களை அழித்தவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி மக்கள் நீதி மையம் ஒன்றிய செயலாளர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
கோவை: நடிகர் கமலஹாசன் பிறந்தநாள் சுவர் விளம்பரங்களை அழித்தவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி மக்கள் நீதி மையம் ஒன்றிய செயலாளர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
நடிகரும் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவருமான கமலஹாசன் பிறந்த நாள் நவம்பர் 7ம் வருகிறது. இதனையொட்டி மக்கள் நீதி மையத்தின் பெரியநாக்கன் பாளையம் ஒன்றிய செயலாளர் பொறுப்பில் உள்ள மோகன் என்பவர் கோயம்புத்தூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பாலத்தின் சுவர் ஒன்றில் விளம்பரம் செய்திருந்தார்.

இந்நிலையில், விளம்பரம் செய்யப்பட்டு இருந்த சுவற்றின் மீது நீல நிறம் கொண்டு அழிக்கப்பட்டு உள்ளது. கட்சி சார்பில் தங்களின் தலைவருக்கு வாழ்த்துகள் கூறி விளம்பரம் செய்யப்பட்ட சுவர் மீது வர்ணம் கொண்டு அழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெ.ந.பாளையம் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
நடிகரும் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவருமான கமலஹாசன் பிறந்த நாள் நவம்பர் 7ம் வருகிறது. இதனையொட்டி மக்கள் நீதி மையத்தின் பெரியநாக்கன் பாளையம் ஒன்றிய செயலாளர் பொறுப்பில் உள்ள மோகன் என்பவர் கோயம்புத்தூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பாலத்தின் சுவர் ஒன்றில் விளம்பரம் செய்திருந்தார்.
இந்நிலையில், விளம்பரம் செய்யப்பட்டு இருந்த சுவற்றின் மீது நீல நிறம் கொண்டு அழிக்கப்பட்டு உள்ளது. கட்சி சார்பில் தங்களின் தலைவருக்கு வாழ்த்துகள் கூறி விளம்பரம் செய்யப்பட்ட சுவர் மீது வர்ணம் கொண்டு அழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெ.ந.பாளையம் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.